Previous Chapter -- Next Chapter
3. காப்பு வாதத்தின் நோக்கம் என்ன?
இந்த கேள்விக்கான பதிலை தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் எடுத்துரைக்கிறார்: “கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும். எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.” (2 தீமோ. 2:24-26).`
இதிலிருந்து நாம் கீழ்க்காணும் காரியத்தை தெளிவாகக் காண முடியும்: விசுவாசத்திற்கு எதிர்த்து நிற்கிறவர்களுக்குக் கடவுள் மனந்திரும்புதலைக் கொடுப்பாராகில் அவர்களை கனிவான முறையில் சரிப்படுத்துவதே கிறிஸ்தவ கொள்கைக் காப்புவாதத்தின் நோக்கம் ஆகும்.