Grace and TruthThis website is under construction ! |
|
Home Afrikaans |
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 007 (How to carry out apologetics)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian
Previous Chapter -- Next Chapter 11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 2 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் அடிப்படை அணுகுமுறை
7. கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையில் ஈ.டுபடுவது எவ்வாறு?கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையை எப்படி நடத்துவது என்ற நடைமுறை வழிகாட்டுதலை நாம் வேதாகமத்தில் தேடினால் அதை நீதி. 26:4-5-ல் பார்க்கிறோம். அது இரண்டு படியுள்ள செயல்முறையாகும்.
அதாவது, நாம் மூடனுடைய வாதம் அவனை எங்கு இட்டுச் செல்லும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்; அதன் பிறகு கடவுளின் ஞானத்தைப் பின்பற்றி நடந்தால் அது மனிதர்களை எங்கு நடத்திச் செல்லும் என்பதை அவர்கள் பார்க்கும்படி அவர்களிடம் கேட்க வேண்டும். நாம் நம்பிக்கையில் மாறுபடுகிறவர்களுடன் பேசும்போது அவர்களுக்கும் நமக்கு அடிப்படைச் சிந்தனையிலும் உலக நோக்கிலும் வித்தியாசம் இருப்பதால், எதையும் இரு தரப்பாலும் ஒன்று போல பார்க்கவே முடியாது. இதைத்தான் பவுல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.” (1கொரிந்தியர் 1:18). இந்த வசனத்தில் மீட்கப்பட்டவர்கள் மற்றும் கெட்டுப் போகிறவர்கள் ஆகிய இரண்டு தரப்பினரும் சிலுவை என்ற ஒரே காரியத்தைப் பார்க்கிறார்கள். ஒரு தரப்பு அதை கடவுளுடைய வல்லமையாகப் பார்க்கின்றது, மற்றது அதை பைத்தியமாகப் பார்க்கின்றது. இரு தரப்பும் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டரா இல்லையா என்பதைக் குறித்த கருத்து வேறுபாடு கொள்ளுவதைவிட முக்கியமான வித்தியாத்தைக் கொண்டிருக்கின்றன. இரு தரப்பும் ஒரு காரியத்தை முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் பார்க்கிறார்கள். |