Home
Links
Contact
About us
Impressum
Site Map?


Afrikaans
عربي
বাংলা
Dan (Mande)
Bahasa Indones.
Cebuano
Deutsch
English-1
English-2
Español
Français
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
മലയാളം
O‘zbek
Peul
Português
Русский
Soomaaliga
தமிழ்
తెలుగు
Türkçe
Twi
Українська
اردو
Yorùbá
中文



Home (Old)
Content (Old)


Indonesian (Old)
English (Old)
German (Old)
Russian (Old)\\

Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 030 (Summary of the Method of Apologetics)
This page in: -- Chinese? -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 3 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் செயல்முறைகள்

21. கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான முறைகள்*

* “கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான வேதாகம அறிமுகம்” மற்றும் “கொள்கைக் காப்புரை – வேதாகம கல்லூரி பாடம்” ஆகிய இரண்டு விரிவுரைகளை அடிப்படையாகக் கொண்டது


இங்கு இதுவரை நாம் பார்த்த முக்கியமான காரியங்களைச் சுருக்கிக் கூறலாம்

1. ஒரு நம்பிக்கையாளருக்கும் அவநம்பிக்கையாளருக்கும் இடையில் நடைபெறும் கருத்து முரண்பாடு என்பது இருவேறு முற்றிலும் வேறுபட்ட சிந்தனை அமைப்புகளுக்கிடையில் உள்ள முரண்பாடு. இதில் பல்வேறு ஒப்படைப்புகளும் அனுமானங்களும் அடங்கியிருக்கின்றன.
2. சிந்தனைகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய விதிகள் மற்றும் ஆதாரங்கள் ஆகியவை ஒருவரால் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்ஊகங்களின் அடிப்படையிலேயே ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது மதிப்பீடு செய்யப்படும்.
3. சுய ஆதாரமாகக் கருதப்படும் இறுதி அதிகாரம் குறித்த தொடர்ச்சியான வாதங்கள் அனைத்தும் ஆரம்பப் புள்ளியை வந்தடையும். ஆகவே, இறுதி அதிகாரத்தைக் குறித்த விவாதத்தில் முடிவற்ற வாதத்தை நாம் தவிர்க்க முடியாது. ஆனால், அனைத்து சுற்று வாதங்களும் அறிவுசார் வாதங்களாகவோ அல்லது தகுதியானவையாகவோ இருப்பதில்லை.
4. தர்க்க நியாயம், உண்மைகள், மனிதர்களின் குணாதியசயங்கள் ஆகியவற்றிற்கு அபயமிடுதல் தேவையானதே, ஆனால் காப்புவாதத்தில் அவை போதுமானதல்ல. சின்னச் சின்ன பதில்களும், சாத்தியக்கூறுகளும், தொடர்பற்ற ஆதாரங்களும் அல்ல நம்முடைய தேவை. நாம் அவநம்பிக்கையாளர்களின் சிந்தனைகளுக்கு ஆதாரமாயிருக்கும் அவர்களுடைய முன்ஊகங்களை நாம் தாக்க வேண்டும்.
5. ஒரு அவநம்பிக்கையாளரின் சிந்தனைகள் இவ்வாறு செயல்படுகின்றது:
அ. ஒரு அவநம்பிக்கையாளர் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால் அவர் கடவுள் நம்பிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது. அவர்களுடைய இருதயங்களும், அவர்களைச் சுற்றியுள்ள கடவுளின் வெளிப்பாடுகளைப் போலவே, கடவுளின் இருப்பிற்கும் தன்மைக்கும் சாட்சியிடுகின்றன.
ஆ. ஒரு அவநம்பிக்கையாளர் பொய்யை உண்மை என்று கருதுகிறார்கள். ஆண்டவருக்கு அளிக்கும் மதிப்பில் தங்கள் சிந்தனையைக் கட்டியெழுப்ப மறுக்கும் அவர்கள் மூடர்கள்.
இ. அவர்கள் படைத்தவரை சேவிக்காமல் படைப்புகளுக்குச் சேவை செய்வதைத் தெரிவு செய்வதில் மகிழ்வடைகிறார்களே தவிர சரியான புரிதலில் மகிழ்ச்சியடைவதில்லை. அதன் காரணமாக அவர்கள் தங்கள் சொந்த சிந்தனை முறைகளுக்கு சுய நம்பிக்கையில் தங்களை ஒப்படைத்திருக்கிறார்கள். தாங்கள் ஒருபோதும் அடிப்படையில் பிழை செய்கிறவர்களாக இருக்க முடியாது என்பதில் உறுதியுள்ளவர்களாக இருப்பதால், அவர்கள் விபரீதமான சிந்தனைகளில் மகிழ்ச்சியடைந்து, தனக்குத் தானே சாட்சியிடும் கடவுளுடைய வார்த்தைக்குச் சவால் விடுகிறார்கள்.
ஈ. இதன் விளைவாக, அவநம்பிக்கையாளரின் சிந்தனை அறியாமையையே பிறப்பிக்கிறது. அவர்களுடைய இருளடைந்த வீணான சிந்தனையில், அவர்கள் உண்மையான அறிவை வெறுக்கிறவர்களாகவும், அவர்கள் “அறிவு” என்ற பெயரில் பெற்றுக்கொள்வது அனைத்தும் பொய்மையுமாக இருக்கிறது.
உ. அவநம்பிக்கையாளர்கள் எதையாகிலும் அறிந்திருந்தார்கள் என்றால் அது அவர்கள் அடக்கி வைக்கும் கடவுளுடைய சத்தியத்தின் மீது அவர்கள் சார்ந்திருப்பதன் காரணமாகத்தான். ஆனால், அவர்கள் இந்த சார்ப்பு நிலையை அங்கீகரிப்பதில்லை. இது அவநம்பிக்கையாளர்களுக்கு அறிவுரீதியான ஒரு மனச்சிதைவை உண்டாக்குகிறது. இது அவர்கள் இன்னொன்றைத் தழுவிச் சிந்திப்பதால் ஏற்படுகிறது. அவர்கள் ஒரு வகையில் தங்களைத் தாங்களே எதிரக்கிறார்கள். இந்த நிலையில் இருந்து அவர்களுக்கு ஒரு “தீவிரமான மனமாற்றம்” (மனந்திரும்புதல்) தேவைப்படுகிறது. அப்போதுதான் அவர்களால் உண்மையான சத்தியத்தின் அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஊ. அவநம்பிக்கையாளரின் அறியாமை ஒரு குற்றமாகும். ஏனெனில் கடவுளின் வெளிப்பாட்டிற்கு எதிராக அவர்கள் செய்யும் கலகத்தை எந்த வகையிலும் அவர்கள் நியாயப்படுத்த முடியாது. ஆகவே அவர்கள் எந்த “தற்காப்பும் இன்றி” நிற்கிறார்கள். அவர்களுடைய அவநம்பிக்கை ஆதாரங்கள் இல்லை என்பதால் எழுவதில்லை, அதிகாரமுள்ள கடவுளுடைய வார்த்தையை தங்களுடைய சிந்தனையின் அடித்தளமாகக் கொள்ள அவர்கள் மறுப்பதால் எழுவது.

www.Grace-and-Truth.net

Page last modified on April 13, 2023, at 02:20 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)