Home
Links
Contact
About us
Impressum
Site Map?


Afrikaans
عربي
বাংলা
Dan (Mande)
Bahasa Indones.
Cebuano
Deutsch
English-1
English-2
Español
Français
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
മലയാളം
O‘zbek
Peul
Português
Русский
Soomaaliga
தமிழ்
తెలుగు
Türkçe
Twi
Українська
اردو
Yorùbá
中文



Home (Old)
Content (Old)


Indonesian (Old)
English (Old)
German (Old)
Russian (Old)\\

Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 029 (Preconditions of Intelligibility)
This page in: -- Chinese? -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 3 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் செயல்முறைகள்
20. அறிவுசார் பாவங்கள்

இ) அறிவுடைமையின் முன்நிபந்தனைகள்


அறிவுடைமையின் முன்நிபந்தனைகள்: இயற்கையைப் பற்றி நாம் எதையும் அறிவதற்கு முன்பாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய நிபந்தனைகள்.

சிலர் இக்காரியங்கள் தங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறார்கள். உதாரணமாக, இயேசு கடைக்கப்படாத கடவுளின் மகனாகவும் அதேவேளையில் இஸ்லாத்தில் கூறுகிறபடி படைக்கப்பட்ட நபியாகவும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. ஏனெனில் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான இரண்டு கூற்றுகள். ஆகவே அவை ஒரே நேரத்தில் உண்மையாக இருக்க முடியாது என்று நான் சொன்னால் அதைப் பற்றி நீங்கள் வாதம் செய்ய மாட்டீர்கள். இதை நீங்கள் உண்மை என்று புரிந்துகொண்டு, தயங்காமல் ஏற்றுக்கொள்வீர்கள். ஏன்? இரண்டு முரண்பாடான கூற்றுகள் உண்மையாக இருக்க முடியாது என்று ஏன் நினைக்கிறீர்கள்? ஏனெனில் நாம் தர்க்கவியல் நியாயத்தின் விதியை அனுமானிக்கிறோம். பொய்யுரையாதவரும் தன்னைத் தானே மறுதலியாதவருமாகிய கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையே அதற்கு அடிப்படை. ஆனால், நாம் தர்க்கவாத நியாயத்தை எப்படி நிரூபித்துக் காட்டுவோம்? தர்க்கவாதத்தின் விதிகளை நாம் நிரூபிக்க முயற்சித்தாலும், அவற்றை நாம் நம்முடைய கலந்துரையாடலில் பயன்படுத்த வேண்டும். அல்லது அந்த ஆதாரங்கள் முரண்பாட்டின் முணகலாகவே இருக்கும். இந்த உதாரணத்தில் எந்த கலந்துரையாடலுக்கும் நியாயவாதத்தின் விதிகள் அறிவுடைமைக்கான முன்நிபந்தனையாக இருக்கின்றன. அறிவுடைமையின் முன்நிபந்தனைகளை இலகுவாக அறிந்துகொள்வதற்கான வழி கொடுக்கப்பட்ட தலைப்பில் சொல்லப்படும் கூற்றுகள் பொருளுள்வையாக இருப்பதற்கு எவை உண்மையாக இருக்க வேண்டும் என்ற கேள்வியைக் கேட்பது. உதாரணமாக, ஒரு அவநம்பிக்கையாளர் இவ்வுலகில் ஏன் தீமை இருக்கிறது என்பதைப் பற்றிப் பேசுகிறார் என்று கொள்வோம். எதையும் நாம் “தீமை” என்று அழைப்பதற்கு எது அவசியம் என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும். அல்லது எதையும் நல்லது என்றோ கெட்டது என்றோ அழைப்பதற்கு கிறிஸ்தவ உலக நோக்கு அவசியமா என்பதைக் கேட்க வேண்டும். ஒழுக்கத்தின் இறுதி அளவு கோலாகிய கிறிஸ்தவக் கடவுள் இல்லாமல், அவருடைய தன்மைக்கு எதிரானதுதான் தீமையாக இருப்பதால், எதையும் நல்லது என்றோ கெட்டது என்றோ வகைப்படுத்த முடியாது. ஏனெனில் இப்படிப்பட்ட காரியங்களை அளப்பதற்குப் புறவயப்பட்ட எந்த அளவுகோலும் எங்கும் இல்லை.

www.Grace-and-Truth.net

Page last modified on April 13, 2023, at 02:13 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)