Home
Links
Contact
About us
Impressum
Site Map?


Afrikaans
عربي
বাংলা
Dan (Mande)
Bahasa Indones.
Cebuano
Deutsch
English-1
English-2
Español
Français
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
മലയാളം
O‘zbek
Peul
Português
Русский
Soomaaliga
தமிழ்
తెలుగు
Türkçe
Twi
Українська
اردو
Yorùbá
中文



Home (Old)
Content (Old)


Indonesian (Old)
English (Old)
German (Old)
Russian (Old)\\

Home -- Tamil -- 17-Understanding Islam -- 009 (His Childhood)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஒன்று: இஸ்லாத்தின் தொடக்கத்தைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 2: முகம்மதின் வாழ்க்கை

2.1. அவருடைய குழந்தைப்பருவம்


முகம்மது நபியின் தந்தை, அரேபிய தீபகற்பத்தின் மேற்கு கரையில் அமைந்துள்ள மக்காவில் ஆட்சி செய்த குறைஷி பழங்குடியின் ஒரு பிரிவான ஹாஷிம் குலத்தைச் சேர்ந்தவர். அவரது தாய், மதீனா நகரில் இருந்து சில நூறு கிலோமீட்டர் வடக்கே உள்ள பானு சாரா (Banu Zahra) என்ற பழங்குடியைச் சேர்ந்தவர். திருமணத்திற்குப் பிறகு, பாரம்பரியத்தின்படி, அவரது தாயார் தனது சொந்த ஊரை விட்டுவிட்டு, தனது கணவரோடும் அவரது குடும்பத்தினரோடும் இருப்பதற்காக மெக்காவுக்கு குடிபெயர்ந்தார். முகம்மது பிறக்கும் நேரத்தில் அவரது தந்தை இறந்துவிட்டாலும், அவர் தனது தந்தையின் கோத்திரத்தைச் சேர்ந்தவர் எனக் கருதப்பட்டார்.

அன்றைய சமூக சூழலுக்கேற்பவும், முகம்மதுவின் குடும்ப பின்னணிக்கேற்பவும், அவரது சிறுவயது பருவம் அசாதாரணமாகவே இருந்தது. அந்தச் சமயத்தில் மெக்காவில் அவரது வகுப்பைச் சேர்ந்த பெரும்பாலான குழந்தைகளைப் போலவே, அவரும் ஒரு பாலூட்டும் தாதியால் வளர்க்க அனுப்பப்பட்டார். இதன் காரணமாக, தனது வளர்ச்சி பருவத்தின் பெரும்பகுதியை மெக்காவின் செல்வந்தர்கள் மத்தியிலிருந்து வெளியே கழித்தார். மதீனாவில் பானூ சஃத் (Banu Saʽd) என்ற சமூகத்தைச் சேர்ந்த ஹலிமா அல்-சடியா என்ற பாலூட்டும் தாதியாக இருந்தவரிடம் சுமார் ஆறு ஆண்டுகள் வசித்தார். மதீனாவில் வளர்ந்த சிறு வயதில், அங்கு வாழ்ந்த யூதர்களுடன் தொடர்பு இருந்திருக்கும். அப்போது மதீனாவில் இரண்டு பெரிய அரபு குலங்களே இருந்தன. ஆனால், யூதர்கள் மூன்று பெரிய குலங்களாக இருந்தனர். இவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு லெவண்ட்டிலிருந்து வந்து அரேபியா முழுவதும் குடியேறி வியாபாரம் மற்றும் நகை தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். மதீனாவில் சிறு வயதில் வளர்ந்த அவர், யூத மரபுகளை கவனித்திருக்கலாம். இதுவே, இஸ்லாமிய மற்றும் யூத நம்பிக்கைகளில் காணப்படும் சில ஒற்றுமைகளுக்கு காரணமாக இருக்கலாம்.

இந்தக் காலக்கட்டத்தில்தான், முகம்மது நபியின் உள்ளத்தை இறை தூதர்கள் தூய்மைப்படுத்தியதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர். ஹதீஸ்களின் இரு பெரும் தொகுப்பாளர்களான புகாரியும் முஸ்லீமும், சன்னி முஸ்லீம்களால் மிகவும் மதிக்கப்படும் முகம்மது நபியின் கூற்றுக்களை தொகுத்துள்ளனர். முகம்மது நபியவர்கள், கபிரியேல் (இஸ்லாத்தில் ஜிப்ரீல்) என்ற இறை தூதன் தனது இருதயத்தை ஜம்ஜம் தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்தியதாக விவரித்த ஒரு கதையை அவர்கள் அறிவிக்கின்றனர். மெக்கா என்பது முகம்மது நபியின் சொந்த ஊர். அங்குதான் ஜம்ஜம் கிணறு இருந்தது (இப்போதும் உள்ளது). அவர் பாலூட்டும் தாயிடம் வசித்த மதீனாவிலிருந்து மிக தொலைவில் இது இருந்தது. இந்த கிணறு முஸ்லீம்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

மக்காவில் இருந்தபோது வீட்டின் கூரை திறக்கப்பட்டது, ஜிப்ரீல் கீழே இறங்கி என் நெஞ்சைப் பிளந்து, பின்னர் அதை ஜம்ஜம் தண்ணீரால் கழுவினார். பின்னர் அவர் ஞானம் மற்றும் விசுவாசம் நிறைந்த பொற்குடம் ஒன்றைக் கொண்டுவந்து என் நெஞ்சில் ஊற்றினார். பின்னர் அதை மூடினார்…” (புஹாரி மற்றும் முஸ்லீம் ஆகிய இருவருமே இதைக் குறிப்பிட்டுள்ளனர்)

வேறு சிலர் இந்தக் கதையை வேறுவிதமாகக் கூறுகிறார்கள். அல்லாவின் தூதரான முகம்மது நபி மற்ற சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது ஜிப்ரீல் அவரிடம் வந்ததாக அவரது நண்பர்களில் ஒருவரான அனஸ் இப்னு மாலிக், கூறுகிறார். அவரைப் பிடித்து கீழே தள்ளி, பின்னர் அவரது மார்பை கிழித்து இருதயத்தை வெளியே எடுத்தார். அதிலிருந்து ஒரு இரத்தக் கட்டியை எடுத்து, “இது ஷைத்தானின் (சாத்தான்) பங்கு” என்றார். பின்னர் ஜம்ஜம் தண்ணீரால் நிரப்பப்பட்டிருந்த தங்கக் குவளை ஒன்றில் அதைக் கழுவினார். பின்னர் இருதயத்தை மீண்டும் வைத்து, மார்பை மூடினார் என்று அனஸ் இப்னு மாலிக் கூறுகிறார். சிறுவர்கள் அவரது தாயாரிடம் - அதாவது அவரது பாலூட்டும் தாயிடம் – ஓடிச்சென்று, “முகம்மது கொல்லப்பட்டார்!” என்று சொன்னார்கள். அவரது நிறம் மாறியிருந்தது. அனஸ் கூறுகிறார்: “நான் அவரது மார்பில் அந்த தையலின் தழும்பைக் காண்பதுண்டு.” (இந்த உரையும் சஹீஹ் முஸ்லீமில் சேர்க்கப்பட்டுள்ளது).

சில ஆவணங்களில், ஜிப்ரீல் அல்ல, ஆனால் வேறு இரண்டு தூதர்கள் என்று கூறப்படுகிறது. இந்தக் கதைகள் ஒரே சம்பவத்தின் பல பக்கங்களை காட்டுவதாகவோ அல்லது முற்றிலும் வேறு நிகழ்வுகளை விளக்குவதாகவோ இருக்கலாம் என்று முஸ்லீம் வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். முகம்மது நபியின் பாலூட்டும் தாயாரான ஹலிமா இந்த சம்பவத்தால் பயந்துபோய், அவரை மக்காவிலுள்ள அவரது குடும்பத்தினரிடம் அனுப்பிவிட்டதாக அவர்கள் சொல்கிறார்கள். பின்னர் அவரது தாய் அவர் இறக்கும் வரை அவரை கவனித்துக்கொண்டார், அது ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் நடந்தது. மதீனாவில் உள்ள தனது உறவினர்களைப் பார்க்க சென்று திரும்பும் வழியில் அவர் இறந்துவிட்டார். தாயார் இறந்த பிறகு, முகம்மது நபியைக் கவனிக்கும் பொறுப்பு அவரது தாத்தாவிடம் வந்தது, அவரும் இரண்டு ஆண்டுகளில் இறந்துவிட்டார். பின்னர் முகம்மது நபி தனது தந்தையின் சகோதரர் அபு தாலிபின் வீட்டிற்குச் சென்றார். அவர் முகம்மது நபியை தனது எட்டு குழந்தைகளுடன் சேர்த்து வளர்த்தார்.

அபு தாலிப் மெக்காவிலுள்ள குறைஷி கிளையான ஹாஷிம் குலத்தின் தலைமைப் பதவியை வகித்தார். இந்தக் குலத்தைச் சேர்ந்தவரே முகம்மது நபியின் தந்தையும் ஆவார். ஹாஷிம் குலத்தின் தலைவராக இருந்ததன் காரணமாக, மக்காவில் முகம்மது நபியின் ஆரம்ப காலங்களில் அவரது செல்வாக்கு மற்றும் ஆதரவுக்கு அபு தாலிப் பெரும் பங்களிப்பு செய்தார். அபு தாலிப் வியாபாரியாக வாழ்க்கை நடத்தினார். குறிப்பாக வாழ்க்கையின் பிற்பகுதியில், தனது இளைய குழந்தைகளை வளர்ப்பதற்கு போராடி பணச் சிக்கல்களை எதிர்கொண்டார். இருந்தாலும், அவரும் அவரது குடும்பத்தினரும் அவரது சமூகத்தில் மிகவும் மதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். அபு தாலிப் மதிப்புக்குரிய ஒரு அந்தஸ்த்தில் இருந்தார், இது மற்றவர்களிடம் இருந்து அவருக்கு மதிப்பை ஏற்படுத்தியது. பன்னிரண்டு வயதில், முகம்மது, அபு தாலிப் லெவண்ட் எனப்படும் பகுதிக்கு வணிக பயணம் மேற்கொண்டார். முஸ்லீம் மரபுப்படி, இந்த லெவண்ட் பயணத்தின் போதுதான், முகம்மது ஒரு கிறிஸ்தவருடன் தனது முதல் தொடர்பைக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. தனது பயணங்களின் போது, அபு தாலிப் பஹீரா என்ற துறவியை சந்தித்தார். பஹீராவின் மதம் தெளிவாக இல்லை, ஏனென்றால் வரலாற்றுக் குறிப்புகள் மாறுபடுகின்றன. சில ஆதாரங்கள் அவர் எபியோனைட் (Ebionite), நெஸ்டோரியன் (Nestorian), அல்லது ஒருவேளை Gnostic Nasorean (Gnostic Nasorean) ஆக இருக்கலாம் என்று கூறுகின்றன. முஸ்லீம் மரபுப்படி, (Bahira) என்ற துறவி, முகம்மதுவின் தோள்களுக்கு இடையில் இருந்த பிறவி மச்சத்தை பார்த்து, அவர் எதிர்காலத்தில் ஒரு தீர்க்கதரிசியாக வருவதை கணித்தார் என்று கூறப்படுகிறது. சில முஸ்லீம்கள் இந்த பிறவி அடையாளத்தை "தீர்க்கதரிசியின் முத்திரை" என்று அழைக்கின்றனர்.

முகம்மது நபியின் இளமைப் பருவ விவரங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்? முதலாவதாக, அவர் கிறிஸ்தவ மற்றும் யூத மரபுகளைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தார் என்பதை நாம் அறிவோம். ஆனால், அப்போது அந்த பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் விசுவாச வழியைவிட்டு விலகிப்போனவர்கள் என்று கருதப்பட்டனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதுவே, ஆரம்ப கால இஸ்லாமிய கற்பித்தல்கள் யூத மத போதனைகளுடன் மிகவும் ஒத்துப்போவதற்கான காரணமாக இருக்கலாம் (மேலும், குர்ஆனில் கிறிஸ்தவ நம்பிக்கைகளைப் பற்றிய குறிப்புகள் துல்லியமாக இல்லாததற்கும் இதுவே காரணமாக இருக்கலாம்). இரண்டாவதாக, இந்தக் கதைகளின் நம்பகத்தன்மையைப் பொருட்படுத்தாமல் பார்க்கும்போது, முகம்மது இள வயதிலிருந்தே மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர் என்றும், சிறந்த எதிர்காலம் அவருக்காகக் காத்திருப்பதாகவும் தான் நம்பியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

www.Grace-and-Truth.net

Page last modified on April 10, 2026, at 01:51 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)