Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 051 (Lack of confidence)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter 17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
இஸ்லாத்தில் சுவிசேஷத்திற்கு இருக்கும் தடைகளைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 9: முஸ்லீம்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்போது கிறிஸ்தவர்கள் கடந்து வர வேண்டிய தடைகள்
9.6. தன்னம்பிக்கை இல்லாமைஇன்று பெரும்பாலான தேசங்களில், வேதத்தைக் கடைப்பிடிக்கும் கிறிஸ்தவர்கள் மிகச் சிறிய சிறுபான்மையினராக இருக்கிறார்கள். பெரும்பாலான முஸ்லீம் நாடுகளில், கிறிஸ்தவர்கள் மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறார்கள். சில இஸ்லாமிய நாடுகளில், கிறிஸ்தவர்கள் 1000ஐ விடக் குறைவாகவே உள்ளனர் (உதாரணமாக, சோமாலியாவில், கிறிஸ்தவ விசுவாசிகள் மக்கள் தொகையில் 0.01% மட்டுமே). இது உண்மையில் எண்ணாகமத்தில் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையை மிகவும் ஒத்திருக்கிறது: “அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள். நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்து வந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம் நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரப்பச்செய்தார்கள்.” (எண்ணாகமம் 13:31-33)
இன்றைய கிறிஸ்தவர்களில் பலர் தங்கள் சொந்த பலவீனத்தையும், மற்றவர்களின் வெளிப்படையான பலத்தையும் பற்றி கவலைப்பட்டு, அதே போன்ற உணர்வுகளை அனுபவிக்கிறார்கள். மாபெரும் கட்டளையின் முதல் பகுதியை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்: “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.!” (மத்தேயு 28:18) இன்று தேவைப்படுவது செயல்படும் ஒரு சிறுபான்மை, உப்பு அல்லது ஒளி போன்றவர்கள்; எவ்வளவு குறைவாக இருந்தாலும், அது எல்லாவற்றையும் மாற்றிவிடும். |