Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 058 (False feeling of security)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter 17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
இஸ்லாத்தில் சுவிசேஷத்திற்கு இருக்கும் தடைகளைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 10: கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள நினைக்கும்போது முஸ்லீம்கள் மேற்கொள்ள வேண்டிய சமூகத் தடைகள்
10.1. பொய்யான பாதுகாப்பு உணர்வுஇதற்கு வரலாற்று ஆதாரம் இல்லாவிட்டாலும் கூட. இதன் விளைவாக, பொதுவாக, முஸ்லீம்கள் மற்ற மத நூல்களை ஆராயவோ அல்லது வாசிக்கவோகூட ஆர்வம் காட்டுவதில்லை. கல்வியில் சிறந்து விளங்கும் முஸ்லீம்களும் கூட பைபிளை வாசிப்பதில்லை. ஏனென்றால், அது திரிபுபடுத்தப்பட்டதாக (உரை மாற்றப்பட்டதாக) அல்லது இறைவனால் பின்னர் அருளப்பட்ட வேதங்களால் ரத்து செய்யப்பட்டதாக (செல்லாது என அறிவிக்கப்பட்டதாக) அவர்கள் நம்புகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, முகமதே இறுதித் தூதர் ஆவார், இஸ்லாத்திற்கு முந்தைய எந்த மத நூல்களையும் நம்ப முடியாது. முஸ்லீம்கள் இஸ்லாத்தை ஆழ்ந்து கற்று, அதில் முரண்பாடுகளையும், பொருத்தமற்ற தன்மைகளையும் கண்டறிந்தாலும், பைபிளைப் படிப்பதை விட நாத்திகராக இருப்பதையே தெரிந்துகொள்வார்கள். முஸ்லீம் மதம் மட்டுமே உண்மையான மதம் என்று நம்பியவர்கள், அது உண்மை இல்லை என்று தெரிந்தவுடன், வேறு எதையும் நம்ப முடியாமல் போய்விடுவார்கள்; ஏனென்றால், மிகவும் பாதுகாக்கப்பட்ட மதம், மிகவும் துல்லியமான மதம் என்று ஒருவர் கருதிய இஸ்லாம் மதமே பொய்யாக இருந்தால், வேறு எதையும் நம்ப முடியாது. |