Previous Chapter -- Next Chapter?
3.3. அடிப்படை நம்பிக்கை 3: கடவுள் எழுதிய நூல்கள் இருப்பதில் நம்பிக்கை
இஸ்லாமிய நம்பிக்கையின்படி, இறைவன் மனிதர்களுக்கு வழிகாட்டுவதற்காக 315 வேதங்களை அருளியதாகக் கூறப்படுகிறது (முகமது நபி ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி). ஒவ்வொரு வேதமும் ஒரு தூதர் மூலமாக அவருடைய கால மக்களிடம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த தூதர்களில் எட்டு பேர் மட்டுமே குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள்:
மேலும் நான்கு தூதர்கள் இருந்தனர், அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்கள் பற்றி எந்த தகவலும் நமக்குக் கிடைக்கவில்லை. அவர்கள்:
குர்ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ குறிப்பிடப்படாத மீதமுள்ள 307 தூதர்கள் மற்றும் அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த தூதர்கள் யார், அவர்களுக்கு என்ன வேதங்கள் அருளப்பட்டன என்பது பற்றிய விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, இந்த தூதர்கள் யார் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வருகின்றன. (எகிப்திய மன்னர் பார்வோன் அக்கெனாடென் இந்த தூதர்களில் ஒருவராக இருக்கலாம் என்று சில முஸ்லீம்கள் நம்புகின்றனர்). ஒவ்வொரு வேதமும் அடுத்த வேதம் வெளிப்படுத்தப்படும் வரை பின்பற்றப்பட வேண்டியதாக இருந்தது. வெளிப்படுத்தப்படும்போது அது முந்தைய வேதத்தை பின்னுக்குத் தள்ளும். முகமது நபி இறுதித் தூதர் என்று கூறப்படுகிறது, எனவே குர்ஆனை முன்னிலைப்படுத்தும் வகையில், வேறு எந்த வேதமும் இனி வராது என்கிறார்கள்.
இன்று பெரும்பாலான முஸ்லீம்கள் நம்மிடமுள்ள குர்ஆன் முகமது நபி பெற்ற அதே குர்ஆன் தான் என்றும், அது அல்லாவின் படைக்கப்படாத, நித்தியமான வார்த்தைகள் என்றும் நம்புகின்றனர். ஆனால், எப்போதும் இதுவே நிலைப்பாடு இல்லை. முகமது நபி மறைவுக்கு சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு, குர்ஆனின் தோற்றம் குறித்த அக்கினிப்பரீட்சையான இறையியல் விவாதம் 18 ஆண்டுகள் நீடித்தது ("மிஹ்நத் கல்க் அல்-குர்ஆன்" - குர்ஆன் படைக்கப்பட்டதா என்பதற்கான சோதனை). இஸ்லாமிய பேரரசர் முழுவதும் இருந்த முஸ்லீம் அறிஞர்கள் இரண்டு எதிரெதிர் கருத்துக்களை கொண்டிருந்தனர். அன்றைய முஸ்லீம் பகுத்தறிவாளர்கள் குர்ஆன் நித்தியமானது அல்ல, மாறாக அல்லாவால் படைக்கப்பட்ட ஒன்று, அது அற்புதம் அல்ல என்று நம்பினர். மறுபுறம், சுன்னி முஸ்லீம்கள் குர்ஆன் அல்லாவின் நித்தியமான, படைக்கப்படாத வார்த்தைகள் மற்றும் அற்புதம் என்றே நம்பினர். ஆட்சியாளர்கள் (கலீஃபாக்கள்) ஆரம்பத்தில் பகுத்தறிவாளர்களின் பக்கம் இருந்தனர், இதன் காரணமாக சுன்னி அறிஞர்கள் கசையால் அடிக்கப்பட்டனர், சிறையிலடைக்கப்பட்டனர் மற்றும் கொல்லப்பட்டனர். இந்த விவாதம் கலீஃபா முத்தவாக்கில் தனது கருத்தை மாற்றிக்கொண்டு, அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை மாற்றியமைத்தபோது முடிவுக்கு வந்தது.
தோரா, சங்கீதங்கள் மற்றும் சுவிசேஷம் பற்றிய கருத்து என்ன? நபிகள் நாயகம் அவர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது: “வேதம் வைத்திருக்கும் மக்களை நம்ப வேண்டாம், மறுக்கவும் வேண்டாம், ‘நாங்கள் அல்லாவை நம்புகிறோம், எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதையும், உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதையும் நம்புகிறோம்’ என்று சொல்லுங்கள்.” (ஸாஹீஹ் புகாரி). ஆனால், முஸ்லீம்கள் குர்ஆன் மட்டுமே அதன் மூல வடிவில் அப்படியே இருப்பதாகவும், பிற எஞ்சியுள்ள வேதங்கள் திருத்தப்பட்டதாகவும் நம்புகின்றனர். இந்தக் கூற்று பற்றிய விவாதத்தை நாம் பின்னர் தொடர்வோம். தற்போது, இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரங்களால் மறுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், தர்க்கபூர்வமற்றவை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். பைபிள் மாற்றப்பட்டுவிட்டதாக முஸ்லீம்கள் கூறுகின்றனர், ஆனால் அதற்கான எந்தச் சான்றும் இல்லை; அதேபோல், ஷியா முஸ்லீம்கள் சுன்னி முஸ்லீம்கள் குர்ஆனை மாற்றிவிட்டதாகக் கூறுகின்றனர். இரண்டு சந்தர்பங்களிலும், இந்தக் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேள்வி எழுப்ப வேண்டும். அல்லா தனது முந்தைய வேதங்களைப் பாதுகாக்கவில்லை என்றால், குர்ஆனை அவர் பாதுகாத்திருப்பதாக நாம் எப்படி நினைக்க முடியும்?
ஈசாவின் (இயேசு) அசல் இஞ்ஜீலைப் பற்றிய நம்பிக்கை, முஸ்லீம்களுடன் கலந்துரையாடலுக்கான ஒரு நல்ல தொடக்கப்புள்ளியாக இருக்கலாம் என்று நாம் இன்னும் நினைக்கலாம். இஸ்லாத்தில், இஞ்ஜீல் பற்றிய பெரும்பாலான விஷயங்கள், பெயரிலிருந்தே பிரச்சனையாக உள்ளன. குர்ஆனிலுள்ள இஞ்ஜீல் என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான "ευαγγέλιον" (euangelion) என்பதிலிருந்து வருகிறது. இதன் பிரச்சனை, இது கிரேக்க மூலம் கொண்டது என்பதே ஆகும். குர்ஆன் கூறுகிறது: "[நாம்] ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்;." (குர்ஆன் 14:4) மேலும் இயேசு இஸ்ரவேலர்களிடம் அனுப்பப்பட்டார் என்றும் அது கூறுகிறது. எனவே, எபிரேய மொழி பேசும் மக்களிடத்தில் அனுப்பிக்கப்பட்ட ஒரு யூத தீர்க்கதரிசிக்கு ஏன் கிரேக்க புத்தகம் தேவைப்படுகிறது என்று கேட்கப்படுகிறது. மற்றொரு பிரச்சினை என்னவென்றால், முஸ்லீம்கள் புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்திகளும் இஞ்ஜீல் இல்லை என்று நம்புகிறார்கள், எனவே அவை இறைவனின் ஏவுதலால் உண்டானவை அல்ல என்பது அவர்கள் கருத்து. ஆனால், பின்னர் வரும் ஒரு அத்தியாயத்தில் நாம் இதைப் பற்றி விவாதிப்போம், புதிய ஏற்பாட்டில் முகமது பற்றிய தீர்க்கதரிசனங்கள் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். புதிய ஏற்பாடு உண்மை என்று அவர்கள் நம்பவில்லை ஏனென்றால், இது மட்டும் அவர்களுக்கு ஏன் முக்கியமாய் தேவைப்படுகிறது? முஸ்லீம்கள் இறுதியில் விவிலியத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில வசனங்களை மட்டுமே நம்புவதாகக் கூறுகின்றனர், இஸ்லாத்துடன் ஒத்துப்போகிறது என்று அவர்கள் நினைக்கும் எதையும் ஏற்றுக்கொண்டு, ஒத்துப்போகாதவற்றை நிராகரிக்கின்றனர். அப்போஸ்தலர் பவுலை ஏமாற்றுபவர் மற்றும் பொய்யர் என்று கிட்டத்தட்ட எல்லா முஸ்லீம்களும் நிராகரித்த போதிலும், பின்னர் பார்ப்பது போல், முகமது 1 கொரிந்தியர் 2:9ல் உள்ள பவுலின் வார்த்தைகளை எடுத்து அல்லாவுக்குச் சொந்தமானவை என்று கூறுகின்றனர்.