Previous Chapter -- Next Chapter
9. கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையை எவ்வாறு அணுகுவது
அப்படியானால் நாம் எப்படி கிறிஸ்தவ காப்புரையில் ஈடுபடுவது? பேதுரு இதை மிகவும் தெளிவாக நமக்கு எழுதிக்கொடுத்திருக்கிறார்: “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; ” (1 பேதுரு 3:15). நீங்கள் கிறிஸ்துவில் ஆரம்பிக்க வேண்டும், கிறிஸ்துவில் முடித்தால் மட்டும் போதாது! இப்படிச் செய்தால் நீங்கள் கிறிஸ்தவராக வாழ்வீர்கள். அப்படி நீங்கள் கிறிஸ்தவராக வாழும்போது “உங்களில் இருக்கும் நம்பிக்கையைப் பற்றி” மற்றவர்கள் உங்களிடத்தில் கேட்பார்கள் (1 பேதுரு 2:15). அப்போது அப்படிப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதிலுரைக்கும்போது வேற்று நம்பிக்கையாளர்களுடைய மனநிலையில் உள்ள சில காரியங்களை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால், அவ்வாறு பயன்படுத்துவது நீங்கள் பகிர்ந்துகொள்ளும் நற்செய்தியின் செய்தியை சமரசம் செய்வதாக இருக்கக்கூடாது. அவ்விதமாக நீங்கள் செய்யும் போது தங்கள் நம்பிக்கைகளில் இருக்கின்ற முரண்பாடுகளை அவர்களுக்குக் காண்பிக்க உதவியாக இருக்கும்.