Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 025 (Fools despise wisdom and instruction (Proverbs 1:7, 9:10; Job 28:28; Psalm 111:10))
This page in: -- Chinese? -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian

Previous Chapter -- Next Chapter

11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 3 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் செயல்முறைகள்

19. மூடர் ஞானத்தையும் புத்திமதியையும் அசட்டை செய்கிறார்கள் (நீதிமொழிகள். 1:7; 9:10; யோபு 28:28; சங்கீதம் 111:10)


அனைத்து நபர்களும் முரண்பாடின்றி வாழ்ந்தால் எப்படியிருக்கும்? அதாவது அவரவர் தங்களுடைய உலகப் பார்வைக்கு ஏற்றவாறு நடந்தார்கள் என்றால் என்னவாகும்? நம்பிக்கையாளர்களுக்கும் அவநம்பிக்கையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் சாத்தியப்படும் என்று நினைக்கிறீர்களா? அல்லது பல்வேறு நம்பிக்கையாளர்களிடையில் உள்ள உரையாடல் சாத்தியப்படுமா? தொடர்புப் புள்ளி எதுவும் இருக்கும் என்று கருதுகிறீர்களா? மேற்கண்ட அட்டவணையில் இன்னும் பல தகவல்களை நாம் சேர்க்க முடியும். உதாரணமாக, தர்க்க நியாயத்தைப் பயன்படுத்துதல், அறிவியல் என்றால் என்ன என்று அப்பட்டியல் தொடரும். பல்வேறு உலக நோக்கைப் பின்பற்றுகிறவர்கள் ஒருவருக்கொருவர் கலந்துரையாடுவது இயலாத காரியம் போலவே தோன்றுகிறது. ஆஸ்திரிய-ஆங்கில தத்துவஞானியான விட்ஜென்ஸ்டீன் (ரண்ற்ற்ஞ்ங்ய்ள்ற்ங்ண்ய்) இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒன்றுடன் ஒன்று ஒப்புரவாக்கப்பட முடியாத இரண்டு தத்துவங்கள் ஒன்றை ஒன்று சந்திக்கும்போது இரண்டு நபரும் மற்றவரை மூடன் என்றோ தவறான போதனையாளன் என்றோதான் அறிவிக்கிறார்கள்” (Ludwig Wittgenstein, On Certainty).

உலக நோக்கு கடந்த தொடர்பாடல் என்பது சாத்தியமே இல்லை.

அப்படியானால் இதுதான் முடிவா? கிறிஸ்தவர்கள் மற்ற நண்பர்களோடு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமா? அல்லது கிறிஸ்துவுக்கான அவர்களுடைய ஒப்படைப்பை அவர்கள் சமரசம் செய்துகொள்ள வேண்டுமா? இரண்டாவது தெரிவைத்தான் பல கிறிஸ்தவர்கள் ஏற்கிறார்கள் (அவர்கள் அதை கிறிஸ்துவுக்கான ஒப்படைப்பில் சமரசம் என்று பார்க்காவிடினும்). அப்படிச் செய்யும்போது அவர்கள் முக்கியமான ஒன்றை தவற கவனிக்காமல் விடுகிறார்கள். சில கிறிஸ்தவர்களுக்கு “பொதுவான தளத்திற்கும்” , “நடுநிலையான தளத்திற்கும்” இடையில் உள்ள வித்தியாசம் தெரியாமல் குழப்பம் அடைகிறார்கள். நம்பிக்கையாளர்களும் அவநம்பிக்கையாளர்களும் தங்கள் உலக நோக்கில் முரண்படாதிருந்தால் இவ்விரு தரப்பினருக்கும் இடையில் எந்த “நடுநிலையான தளத்திற்கும்” இடமில்லை என்பது நிச்சயமே. ஆகிலும் அவநம்பிக்கையாளர்கள் தங்கள் உலக நோக்கிற்கு இசைந்து நடப்பதில்லை என்பதை பவுல் ரோமர் 1:19-20-ல் தெளிவாகக் காண்பிக்கிறார். அவநம்பிக்கையாளர்கள் தங்கள் நம்பிக்கையைப் பற்றி என்ன அறிவித்துக் கொண்டாலும் அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள், ஏனெனில் கடவுளே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் (வசனம் 19). இந்த காரியத்தில் அவர்கள் தங்கள் நம்பிக்கைக்கு காப்புரை வழங்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். அதாவது அவர்கள் நம்புவதாக கோரும் உலக நோக்கிற்கு அவர்கள் உண்மையாக இருப்பதில்லை.

அவநம்பிக்கையாளர்கள் மெய்மையின் தன்மை பற்றியும், மனித வாழ்வின் நிலை பற்றியும் அதற்குரிய தீர்வைப் பற்றியும் கொண்டுள்ள நம்பிக்கைகளில் இதை நீங்கள் பார்க்கலாம். நாம் மெய்மையை வெறும் பொருளாக அல்லது மாயத் தோற்றமாகப் பார்த்தால் அதற்குரிய தீர்வாக “சட்டத்தை” அல்லது “மாற்றத்தை” எப்படி முன்வைக்க முடியும்.

ஆனால், இந்த இரு தரப்புக்கும் இடையில் ஒரு விரிவான “பொதுவான தளம்” இருக்கிறது என்று வேதாகமம் சொல்கிறது. ஆனால் அது “நடுநிலையான தளம்” அல்ல என்பதும் உண்மைதான். “பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.” (சங்கீதம் 24:1, உபாகமம் 10:14, அப்போஸ்தலர் 17:24, நெகேமியா 9:6). படைப்பின் ஒவ்வொரு புள்ளியும் தொடர்புப் புள்ளிதான்; கடவுள் சொல்கிற விதமாகவே மனிதனும் இந்த அண்டமும் இருப்பதால் இந்தப் புள்ளிகள் தொடர்புப் புள்ளிகளாக இருக்கின்றன. ஆகவே, கடவுளால் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டு கடவுளுடைய பராமரிப்பில் கடவுளுடைய படைப்பாகிய அண்டத்தில் வாழும் அவநம்பிக்கையாளர்களாகிய அவர்களிடம் நாம் அபயமிடுகின்றோம். நம்முடைய வாதம் ஒரு வெற்றிடத்தில் நடைபெறவில்லை. அது கடவுளால் படைக்கப்பட்டு அவரால் பராமரிக்கப்படுகிறது. அது “பாவத்தையும் நீதியையும் நியாயத்தீர்ப்பையும் குறித்து கண்டித்து உணர்த்தும்” (யோவான் 16:8) தூய ஆவியானவருடைய வல்லமையின் கீழ் நடைபெறுகிறது. நாம் சுய அதிகாரம் உள்ளவர்கள் அல்ல, நாம் இந்த கலந்துரையாடலில் தனிமையை நுழைவதில்லை. நாம் காரியங்களை கடவுளுடைய பார்வையில் பார்க்க வேண்டும் அல்லது கடவுள் பார்க்காத பார்வையில் பார்க்க வேண்டும். இவை தவிர வேறு தெரிவுகள் இல்லை. கொள்கைக் காப்பு வாதத்தில் “யாரும் இல்லா நிலம்” என்று ஒன்றில்லை.

அவநம்பிக்கையாளர்களுக்கு எதையும் உணர்த்துவது நம்முடைய பணி அல்ல என்பதை நான் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். அது தூய ஆவியானவரின் பணியாகும் (யோவான் 16:8). கடவுள் மட்டுமே அவர்களுக்கு மனந்திரும்புதலைக் கொடுக்க முடியும் (2 தீமோ. 2:25). நம்முடைய பணி மிகவும் எளிமையானது, தெளிவானது: “அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.” (2 கொரி. 10:5).

www.Grace-and-Truth.net

Page last modified on April 12, 2023, at 09:13 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)