Previous Chapter -- Next Chapter
அத்தியாயம் 2: முகம்மதின் வாழ்க்கை
முஸ்லீம்கள் அவரை இஸ்லாத்தின் ஒரே தீர்க்கதரிசி எனக் கருதவில்லை. ஆதாம் முதல் ஆரம்பித்து ஆபிரகாம், மோசே, இயேசு போன்ற பல வேதகால பாத்திரங்கள் வரை நீண்ட வரிசையில் வந்த இறுதித் தீர்க்கதரிசி என்று அவரை ஏற்றுக்கொள்கிறார்கள். இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னோடியாகவும், இஸ்லாத்தின் புனித நூலான குர்ஆனை இறைவனிடமிருந்து பெற்றவராகவும் முகம்மது கருதப்படுகிறார். முகம்மது இளமை பருவத்தில் பின்பற்றிய மத நம்பிக்கைகளையும், அக்கால கட்டத்தில் அந்த பகுதியில் இருந்த கிறிஸ்தவ மற்றும் யூத மத போதகர்களுடனான அவரது தொடர்பையும் பற்றியும் இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். இவை அனைத்தும் இஸ்லாமியக் கொள்கைகளின் வளர்ச்சியில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் ஆராய்வோம். அவரது சிறுவயதுப் பருவத்திலிருந்து தொடங்கி, அவரது முதல் திருமணம், தீர்க்கதரிசி பதவிக்கான அழைப்பு, மெக்காவில் கழித்த ஆண்டுகள், மதீனாவுக்கு இடம் பெயர்வு மற்றும் இஸ்லாத்தை ஒரு போராளிக் குழுவாக நிறுவுதல் வரை அவரது வாழ்க்கையைப் பற்றி பார்ப்போம்.