Previous Chapter -- Next Chapter
அத்தியாயம் 3: அடிப்படை நம்பிக்கைகள்
ஒருவர் முஸ்லீமாக இருப்பதற்கு, ஆறு அடிப்படை ஈமான் கருத்துக்களையும், ஐந்து கிரியைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இந்தக் கருத்துக்கள் குர்ஆனில் (இஸ்லாமியர்களின் புனித நூல், கடவுள் முகமதுக்கு அருளியதாகக் கருதப்படுகிறது) வெளிப்படையாகக் கூறப்படவில்லை, மாறாக முகமதின் சொற்களை தொகுத்து இறுதியில் எழுத்து வடிவம் கொடுத்த ஹதீஸ்களிலிருந்து பெறப்படுகின்றன. பல்வேறு ஹதீஸ் தொகுப்புகள் உள்ளன, ஒவ்வொன்றும் அவற்றை தொகுத்து ஆவணப்படுத்தியவரின் பெயரில் அழைக்கப்படுகின்றன, சில தொகுப்புகள் மற்றவற்றை விட நம்பகத்தன்மை வாய்ந்தவை எனக் கருதப்படுகின்றன. ஆறு தத்துவங்களும் ஐந்து கடமைகளும் முஸ்லீம் என்ற மிகவும் மதிக்கப்படும் ஹதீஸ் தொகுப்பாளர்களில் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட ஒரே ஹதீஸ் தொகுப்பிலிருந்து வருகின்றன, இவரது தொகுப்பு சுன்னி முஸ்லீம்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இருப்பினும், ஷியா முஸ்லீம்கள் எந்த சுன்னி ஹதீஸ் தொகுப்புகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் அவர்களுக்கே உரியவை உள்ளன என்பதைக் கவனிப்பது அவசியம். முகமது தனது சீடர்களின் ஒரு குழுவினருடன் ஒரு நாள் அமர்ந்திருந்தபோது, வெள்ளை உடையில் அந்நியர் ஒருவர் முகமதுவிடம் வந்து இஸ்லாத்தைப் பற்றி கேட்டதாக முஸ்லீம் ஒரு கதையைச் சொல்கிறார்; முகமது இப்போது இஸ்லாத்தின் தூண்கள் என்று அறியப்படும் விஷயங்களை சுருக்கமாகக் கூறி பதிலளித்தார். பின்னர் அந்த அந்நியர் விசுவாசம் பற்றி விசாரித்தார், அதற்கு முகமது இப்போது இஸ்லாமிய நம்பிக்கைகளின் கொள்கைகள் என்று அங்கீகரிக்கப்பட்டவற்றுடன் பதிலளித்தார். முஸ்லீமின் கூற்றுப்படி, அந்த அறிமுகமில்லாத நபர் முகமதுவின் கூற்றுகளின் துல்லியத்தை உறுதிப்படுத்திவிட்டு சென்றார். அந்த நேரத்தில், வந்த அந்த அந்நியர் உண்மையில் கபிரியேல் என்ற இறை தூதன் தான் என்பதை முகமது குழுவினருக்கு வெளிப்படுத்தினார்.
இந்த அத்தியாயம் இஸ்லாத்தின் ஆறு அடிப்படை நம்பிக்கைகளை ஆராய்கிறது; அடுத்த அத்தியாயம் ஐந்து கடமைகளை விளக்குகிறது.