Previous Chapter -- Next Chapter
17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி மூன்று: முஸ்லீம் கிறிஸ்துவைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 6: இஸ்லாத்தில் கிறிஸ்து
6.7. கிறிஸ்து அற்புதம் செய்பவர்
கிறிஸ்துவின் தனித்துவத்தை நாம் இஸ்லாத்தில் பல வழிகளில் கண்டிருக்கிறோம். அவற்றில் ஒன்று அவர் நிகழ்த்தியதாகக் கூறப்படும் பல அற்புதங்கள்:
"நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாவின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாவின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்).." (அல்குர்ஆன் 3:49)
"அல்லாவின் அனுமதியால்" என்ற சொற்றொடர் இருந்தபோதிலும், இந்த வசனம் படைப்பு உட்பட இஸ்லாமின் வேறு எந்த தீர்க்கதரிசியும் செய்யாத அற்புதங்களை கிறிஸ்து செய்ததைப் பற்றி இன்னும் கூறுகிறது. இதை முகமதுவைப் பற்றி குர்ஆன் கூறுவதுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்:
"இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் "அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு." (அல்குர்ஆன் 13:7)
"அவர் கடவுளின் அப்போஸ்தலர்களில் கடைசி மற்றும் பெரியவராக இருந்தபோதிலும், முந்தைய தீர்க்கதரிசிகள் தங்கள் வாய்மொழி செய்திகளை வலுப்படுத்துவதற்காக அற்புதங்களைச் செய்ததாகக் கூறப்படுவதைப் போன்ற அற்புதங்களைச் செய்ய முகமதுக்கு அதிகாரம் இல்லை" என்று முஸ்லீம் அறிஞர்கள் அங்கீகரிக்கின்றனர். அவரது ஒரே அற்புதம் குர்ஆன் மட்டுமே. (முகமது அஸத், குர்ஆனின் செய்தி).