Previous Chapter -- Next Chapter
9.7. முஸ்லீம்கள் மீது அன்பில்லாமை
இஸ்லாமிய ஆட்சியின் கீழ் பல ஆண்டுகளாக நீடித்த துன்பங்களாலும், கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தின் கீழ் அனுபவித்த துன்புறுத்தல்களாலும் (இன்றும் அனுபவித்து வருகின்றனர்) பல கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களை உண்மையான அன்பைக்கொண்டு நேசிப்பதில் தோல்வியடைகிறார்கள். இது இரண்டு விளைவுகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, ஒரு உந்துதல் இல்லை. இயேசுவின் தெளிவான கட்டளைகள் நம் பகைவர்களை நேசிக்கவும், நம்மை துன்புறுத்துபவர்களுக்காக ஜெபம் செய்யவும் நமக்குச் சொல்லியிருந்தாலும் (மத்தேயு 5:44), நம் மனித சுபாவம் பெரும்பாலும் தலையெடுத்து மேற்கொள்வதால், நாம் விரும்புவதில்லை. கடவுளின் அன்பைப் பெற முஸ்லீம்கள் தகுதியற்றவர்கள் என்று நாங்கள் உணர்கிறோம். இரண்டாவதாக, அன்பு செய்ய முடியாதவர்களாக இருந்தால், கிறிஸ்தவர்கள் எப்படி கடவுளின் அன்பைப் பறைசாற்ற முடியும்? எதிரிகளை நேசிப்பதாகச் சொல்லிக்கொண்டு, அன்பு செலுத்துவதைக் காட்டவில்லை என்றால், நம்மை யார் நம்புவார்கள்? கடவுளுடன் தன் பகைவர்களை ஒப்புரவாக்கிய கிறிஸ்துவின் இருதயமே நமக்குத் தேவை (ரோமர் 5:10).