Previous Chapter -- Next Chapter
9.9. கிறிஸ்து செய்து முடித்த வேலையில் நம்பிக்கை குறைவு
யாராவது இஸ்லாத்திற்கு மதம்மாறியதைக் குறித்து கிறிஸ்தவர்கள் அடிக்கடி கேள்விப்படலாம். இது முஸ்லீம்களால் கொண்டாடப்படுகிறது, சில சமயங்களில் மதச்சார்பற்ற ஊடகங்களாலும் கொண்டாடப்படுகிறது, ஆனால் ஒரு முஸ்லீம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவது பற்றி மிக அரிதாகவே கேட்கிறோம். இஸ்லாமிய மதத்தை விட்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள், தங்களின் மதமாற்றத்தை மறைத்து வைத்திருக்கிறார்கள். இதற்குக் காரணம், இதுபோன்ற மதமாற்றம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அல்லது சில சமயங்களில் அவர்கள் நம்பப்படுவதில்லை. இது ஒரு முஸ்லீம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவது சாத்தியமற்றது என்ற எண்ணம் ஏற்பட வழிவகுக்கிறது. இது நம்பிக்கையின்மையைக் குறிக்கிறது. அதாவது, இது கடவுளால் செய்யமுடியாத கடினமான வேலை என்ற கருத்தை இது மறைமுகமாகத் தெரிவிக்கிறது. ஆனால், பைபிள் கொடியவர்கள் கொடுமைகள் செய்தும் கடவுளின் கிருபையால் மீட்கப்பட்ட கதைகளால் நிறைந்துள்ளது (நாம் விசுவாசத்திற்கு வருவதற்கு முன்பு நாம் அனைவரும் கடவுளிடமிருந்து ஒரே மாதிரி தூரத்தில் இருக்கவில்லையா?).