Previous Chapter -- Next Chapter
17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஐந்து: கிறிஸ்தவத்துக்கான முஸ்லீம்களின் எதிர்ப்பைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 13: கிறிஸ்தவத்துக்கு இஸ்லாமின் எதிர்ப்பு
13.1. குர்ஆன் அப்படியே இருக்கிறது, ஆனால் பைபிள் திருத்தப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கை
13.1.5. குர்ஆன் முற்றிலும் திருத்தப்படாமல் பாதுகாக்கப்பட்டதா?
குர்ஆன் மாற்றப்படாமல் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பது மற்றொரு தவறான கருத்து, இது முஸ்லீம் ஆதாரங்களாலேயே மறுக்கப்படுகிறது. பல இஸ்லாமிய ஆதாரங்களில், மூல குர்ஆனின் சில பகுதிகள் காணாமல் போனதைக் காண்கிறோம். உதாரணமாக, குர்ஆனுக்கு விளக்கம் எழுதிய அல்-குர்துபி தனது விளக்கத்தில் இவ்வாறு எழுதுகிறார்:
“ஆயிஷா இவ்வாறு கூறுகிறார்: "நபியின் வாழ்நாளில் சூரத் அஹ்ஸாப் 200 வசனங்களைக் கொண்டிருந்தது, ஆனால் குர்ஆன் தொகுக்கப்பட்டபோது, தற்போதைய குர்ஆனில் காணப்படும் அளவை (அதாவது 73 வசனங்கள்) மட்டுமே நாங்கள் கண்டோம்". (Qurtubi, Qur’an commentary on Surah Ahzab).
குர்ஆனில் ஏற்பட்ட மாற்றத்திற்கு இன்னொரு உதாரணத்தை முஸ்லீம் தொடர்ந்து ஹதீஸில் (நபியின் மொழி மற்றும் செயல்கள் பற்றிய கூற்றுக்கள்) சொல்கிறார்:
"உமர் பின் கத்தாப் அல்லாஹ்வின் தூதரின் மிம்பரில் அமர்ந்து, ' நிச்சயமாக அல்லா முகமதை உண்மையுடன் அனுப்பினான், அவன் மீது வேதத்தை இறக்கினான், கல்லால் அடித்துக் கொலைசெய்வதற்கான வசனம் அவனுக்கு இறக்கப்பட்டதில் சேர்க்கப்பட்டது' என்றார். "நாங்கள் அதை ஓதினோம், நினைவில் வைத்திருந்தோம், புரிந்துகொண்டோம். "அல்லாஹ்வின் தூதர் கல்லெறிந்து கொல்லும் தண்டனையை (திருமணமான விபச்சாரி மற்றும் விபச்சாரிக்கு) வழங்கினார், அவருக்குப் பிறகு, கல்லெறியும் தண்டனையையும் வழங்கினோம், காலப்போக்கில், மக்கள் (அதை மறந்துவிடலாம்) என்று நான் பயப்படுகிறேன். மேலும் கூறினார்: அல்லாவின் புத்தகத்தில் கல்லெறியும் தண்டனையை நாங்கள் காணவில்லை, இதனால் அல்லா விதித்துள்ள இந்தக் கடமையை விட்டுவிட்டு வழிதவறிச் செல்கிறோம். “கல்லெறிதல் என்பது விபச்சாரம் செய்த திருமணமான ஆண்களுக்கும் பெண்களுக்கும், சான்று கிடைக்கும்போது அல்லது கர்ப்பம் இருக்கும்போது அல்லது (குற்றத்தை) ஒப்புக்கொள்ளும்போது அல்லாஹ்வின் வேதத்தில் கட்டளையிடப்பட்ட கடமையாகும்.” (Sahih Muslim)
மூன்றாவது மாற்றம் குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளது, இதை இப்னு மஜா தொகுத்த ஹதீஸ் (நபியின் பேச்சு மற்றும் செயல்கள் பற்றிய தொகுப்பு) நூலில் சொல்லப்பட்டுள்ளது. இதில், முகமதின் மனைவி ஆயிஷா சொன்னதாகக் கூறப்பட்டுள்ளது:
“கல்லெறிதல் மற்றும் வயதுக்கு வந்தவரை பத்து முறை மார்பக பாலூட்டுவது குறித்த வசனம் அருளப்பட்டது, அந்தக் காகிதம் என் தலையணையின் கீழ் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் இறந்தபோது, அவரது மரணத்தில் நாங்கள் கவனம் செலுத்தினோம், அப்போது அடுத்த வீட்டு ஒரு வளர்ப்பு ஆடு வந்து அதைக் கடித்து (அழித்து) விட்டது.” (Sunan Ibn Majah)
இவை குர்ஆன் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றிய கூற்று இன்னொரு தவறான கருத்து என்பதைக் குறிப்பிடும் பல ஆதாரங்களில் மூன்று மட்டுமே. இது பெரும்பான்மையான முஸ்லீம்களால் நம்பப்படுகிறது, ஆனால் இஸ்லாமிய ஆதாரங்களால் ஆதரிக்கப்படவில்லை.