Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 032 (The Procedure for Defending the Faith)
This page in: -- Chinese? -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian
Previous Chapter -- Next Chapter
11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 3 – ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் செயல்முறைகள்
23. நம்பிக்கையைக் காப்பதற்கான செய்முறை
அவநம்பிக்கையாளர் அநீதியில் இருப்பதால் சத்தியத்தைவிட்டு விலகிச் செல்கிறார் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் (ரோமர் 1:18). இது உண்மைகளின் வேதாகம தத்துவத்தின் பின்னணியில் அவற்றை வாழங்குவதை உள்ளடக்கியிருக்கிறது:
1. சாத்தியமாகக் கூடியதையும் சாத்தியமாகாதவைகளையும் நிர்ணயிப்பது எல்லா அதிகாரமும் உள்ள கடவுள்தான்.
2. உண்மைகளை நாம் சரியாக ஏற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் கிறிஸ்துவின் கர்த்தத்துவத்திற்கு நம்மை ஒப்படைக்க வேண்டும்.
3. அவநம்பிக்கையாளர்களின் மனம் இருளிலிருந்து ஒளியினிடத்திற்குத் திரும்பினால் (அதாவது மனந்திரும்புதல் ஏற்பட்டால்) மட்டுமே உண்மைகள் அவர்களுக்கு முக்கியமானவையாக இருக்கும்.
4. அறிவு சாத்தியமா என்பதைக் கேட்டு, அவநம்பிக்கையாளர்களின் தழுவிய முன்ஊகங்களை தீவிரமாக சவாலுக்கு உட்படுத்த வேண்டும்.
அ. இவ்வுலகத்தின் ஞானத்தைக் கடவுள் பைத்தியமாக்கியிருக்கிறார் என்பதைக் காண்பிக்க (1 கொரி. 1:20), மூடன் தன்னுடைய பார்வையில் ஞானியாகத் தோன்றாதபடி (நீதி. 26:5), நம்பிக்கையாளர் அவநம்பிக்கையாளரின் இடத்தில் தன்னை வைத்து மூடனுக்கு அவனுடைய மூடத்தனத்தின்படியே பதிலுரைக்க வேண்டும். அதாவது, நம்பிக்கையாளர் அவநம்பிக்கையாளரின் சிந்தனை ஓட்டத்தை அதன் ஊகங்களின் மூலம் வெளிப்படுத்திக் காண்பிக்கிறார்.
ஆ. அவநம்பிக்கையாளரின் முன்வைக்கும் சிந்தனை அமைப்பு முறைக்கு உள்சென்று அதை விமர்சிப்பதன் மூலம் அவருடைய கூற்றுகள் வலுவற்றவை என்றும் சாத்தியமற்றவை என்றும் காண்பிக்கப்பட வேண்டும். கிறிஸ்தவத்தோடு முரண்படும் எதுவும் சாத்தியமற்றது என்று வாதிடுவதன் மூலம் அவநம்பிக்கையின் அறியாமையை காப்புரையாளர் விளக்கிக் காண்பிக்க வேண்டும்.
5. அவநம்பிக்கையாளர் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டவர், அதனால் அவர் தப்பிக்க முடியாத தெளிவான இறைவெளிப்பாட்டை அவர் பெற்றிருக்கிறார், அதை அவர் ஒருபோதும் அழித்துவிட முடியாது என்ற உண்மைக்கு நாம் அபயமிட வேண்டும். அவர்களுடைய முன்ஊகங்களுக்கு பொருள்தர முடியாத கூற்றுகள் அல்லது அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் முன்ஊகங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துவதன் மூலமாக அவர்களுக்கிருக்கும் இந்த அறிவை உணர்த்திக்காட்ட முடியும்.
6. அறிவுடைமையின் முன்நிபந்தனை தன்னைத் தானே நிரூபித்துக்கொள்ளும் கடவுளுடைய சத்தியமே என்றும் அதுவே மனிதனுடைய மீட்புக்கான ஒரே வழி என்றும் காப்புரையாளர் தெளிவாக அறிவிக்க வேண்டும்.
அ. நம்பிக்கையாளர் அவநம்பிக்கையாராக மாறிவிடாதபடி தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். அவநம்பிக்கையாளர்களுக்கு அவர்களுடைய மூடத் தனத்தின்படி பதிலுரைக்காமல் கடவுளுடைய வார்த்தையின் படி பதிலுரைக்க வேண்டும் (நீதி. 26:4).
ஆ. அறிவுசார் அனுபவத்திற்கும் தகவல்கள் குறித்த அறிவிற்கும் கிறிஸ்தவ நிலைப்பாடுதான் தேவையான அடித்தளத்தைத் தருகிறது என்பதைக் காணும்படி கிறிஸ்தவர்களின் நிலையில் தங்களை இருத்திப் பார்க்க அவநம்பிக்கையாளர்களுக்கு அழைப்பு விட வேண்டும். இதன் மூலம் இந்த கிறிஸ்தவ நிலைப்பாடுதான் ஒருவர் நம்பக்கூடிய நியாயமான நிலைப்பாடு என்றும் எதையும் நிரூபிப்பதற்கு உரிய அடித்தளம் என்றும் முடிவு செய்ய அவர்களுக்கு உதவ வேண்டும்.