Grace and TruthThis website is under construction ! |
|
|
Home Afrikaans |
Home -- Tamil -- 17-Understanding Islam -- 077 (Challenges to the validity of the Bible as Muslims believe it has been abrogated by the Qur’an)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu? -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter 17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஐந்து: கிறிஸ்தவத்துக்கான முஸ்லீம்களின் எதிர்ப்பைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 13: கிறிஸ்தவத்துக்கு இஸ்லாமின் எதிர்ப்பு
13.2. பைபிள் செல்லாது என குர்ஆன் சொன்னாலும், பைபிளின் செல்லுபடியில் உள்ள சவால்கள்குர்ஆன் சொல்கிறது: ரத்துசெய்யப்படல் என்ற இஸ்லாமிய கருத்தின் மூலம் கிறிஸ்தவ மதத்திற்கு இரண்டாவது பெரிய சவால் வருகிறது. இது, குர்ஆன் தனக்கு முன் வந்த அனைத்து தெய்வீக வேதங்களையும் ரத்துசெய்கிறது என்ற நம்பிக்கையாகும். இந்தக் கொள்கை குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ தெளிவாகக் கூறப்படவில்லை என்றாலும், குர்ஆனின் ஒரு வசனம் மற்றும் ஒரு ஹதீஸ் மூலம் இது பரிந்துரைக்கப்படுகிறது. குர்ஆன் கூறுகிறது: “இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.” (குர்ஆன் 3:85))
மேலும், முகமது இவ்வாறு கூறியதாகக் கூறப்படுகிறது: “முகமதின் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது ஆணை! யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களின் சமூகத்தில் யார் என்னைப் பற்றி கேள்விப்பட்டு, நான் அனுப்பப்பட்டதில் தனது நம்பிக்கையை உறுதிப்படுத்தாமல், இந்த (நம்பிக்கையற்ற) நிலையில் இறக்கிறாரோ, அவன் நரகத்தின் மக்களில் ஒருவனாகவே இருப்பான்.” (ஸாஹீஹ் முஸ்லீம்).
முஸ்லீம்கள் இஸ்லாம் மட்டுமே அல்லாவுக்கு ஏற்புடையது என்று நம்புகிறார்கள், அதாவது, முஸ்லீம்களைப் பொறுத்தவரை, பிற மதங்கள் அனைத்தும் குர்ஆனால் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்துசெய்வது என்றால் அதை ஏற்காமல் ஒதுக்குவது, ஒழிப்பது, திரும்பப் பெறுவது, மீறுவது என்ற அர்த்தம். இந்த அர்த்தத்தில், ரத்துசெய்தல் என்பது சட்டங்கள் அல்லது விதிகளுக்கு மட்டுமே பொருந்தும், வரலாற்று நிகழ்வுகளுக்கு இது பொருந்தாது. அதாவது, குர்ஆன் தனக்கு முன் வந்த எந்த வேதத்தின் வரலாற்று நிகழ்வுகளையும் மாற்ற முடியாது. ஆனால், நாம் குர்ஆனைப் படிக்கும்போது, முற்றிலும் எதிரான விஷயத்தைக் காண்கிறோம் - குர்ஆன் யாத்திராகமம் தொடர்புடைய கதையை மாற்றியுள்ளது! "சமாரியன்" இஸ்ரவேலை விலக்கி, அவர்களை பொன் கன்றைக் கும்பிட வழிநடத்தியதாக குர்ஆன் கூறுகிறது, ஆனால் யாத்திராகம காலத்தில் சமாரியா என்ற இடமே இருக்கவில்லை. குர்ஆன் வரலாற்றை மாற்றுவது மட்டுமல்லாமல், பல வரலாற்று நிகழ்வுகளையும் ஒன்றாகக் கலந்து விடுகிறது. உதாரணமாக, ஒரு வசனத்தில் மூன்று வெவ்வேறு வரலாற்று காலகட்டங்களை குழப்புகிறது. இது மோசேயின் காலத்திலிருந்த பார்வோனை மேற்கோள் காட்டி இவ்வாறு கூறுகிறது: “(இவ்வளவு உபதேசித்த பின்னரும்;) "ஹாமானே உயரமான ஒரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக - நான் (மேலே செல்வதற்கான) பாதைகளைப் பெறும் பொருட்டு!.” (குர்ஆன் 40:36)
ஆயினும், பார்வோன், ஆமான் (எஸ்தர் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அகஸ்வேருஸ் மன்னரின் மந்திரி) என்பவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், வானத்தை எட்ட முயற்சித்த கட்டிடம் (ஆதியாகமம் 11 இல் விவரிக்கப்பட்ட பாபேலின் கோபுரம்) கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் வாழ்ந்தார். நவீன முஸ்லீம்கள் "ஹாமான்" என்பது இரண்டு வார்த்தைகள் "ஹா மான்" என்று "ஹா-அமோன்" என்ற ஆமோனின் தலைமை பூசாரி என்பதிலிருந்து விளக்க முயற்சிக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, இது வேலை செய்யாது மற்றும் சிக்கலையும் தீர்க்காது. எகிப்தியர்கள் எபிரேய சுட்டுச்சொல்லான "ஹா" என்ற சொல்லைப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதால் இது வேலை செய்யாது. இது (உண்மையில்லை), ஒருவேளை உண்மையாக இருந்தாலும் பாபேலின் கோபுரத்தின் அதே காலகட்டத்தில் அவர் ஏன் வைக்கப்பட்டார் என்பதை இன்னும் விளக்கவில்லை. குர்ஆன் நோவாவின் மகன்களில் ஒருவர் வெள்ளத்தில் மூழ்கி இறந்ததாகக் கூறுகிறது (குர்ஆன் 11:42-43). ஆனால், பைபிளிலிருந்து அவரது குடும்பத்தினர் அனைவரும் வெள்ளத்திற்குப் பிறகு உயிருடன் இருந்ததாக நாம் அறிவோம். குர்ஆனிலுள்ள வேறு சில கூற்றுக்கள் பைபிளின் வரலாற்று விவரங்களை எதிர்க்கின்றன. இதில், யோபு ஈசாக்கின் வழித்தோன்றல் (குர்ஆன் 6:84) என்று விவரிக்கப்படுகிறது, இஸ்மாயில் ஒரு தீர்க்கதரிசி மற்றும் தூதர் (குர்ஆன் 19:54) என்று விவரிக்கப்படுகிறது, மேலும் சிலுவை மரணம் மறுக்கப்படுகிறது (குர்ஆன் 4:157). கட்டளைகள் ரத்துசெய்யப்படலாம் என்றாலும், வரலாற்று நிகழ்வுகளை ரத்துசெய்வது என்பது சாத்தியமற்றது. மேலும், குர்ஆனிலுள்ள பெரும்பாலான கதைகள் மிகவும் தெளிவற்றவை, அவற்றை பைபிளின் அடிப்படையிலேயே புரிந்துகொள்ள முடியும். ரத்துசெய்தல் என்ற கருத்தானது முந்தைய வேதங்கள் மட்டுமல்ல, பின்னர் எழுதப்பட்டவற்றால் முரண்படும் குர்ஆனின் முந்தைய பகுதிகளுக்கும் குறிக்கிறது. எனவே, இஸ்லாமியக் கற்பித்தல்களை ஏற்றுக்கொள்வதற்கு இது ஒரு அவசியமான கருத்தாக இருக்கலாம், இல்லையெனில், இஸ்லாமிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால், குர்ஆனில் நம்பகத்தன்மை இழக்கப்பட்டு, அதிக முரண்பாடுகள் தோன்றும். இவற்றையெல்லாம் இங்கு குறிப்பிட முடியாது என்றாலும், குர்ஆனில் ரத்துசெய்யப்பட்ட விஷயங்களில், முகமது ஆரம்பத்தில் அல்லாவினால் அவருக்கு வெளிப்படுத்தப்பட்ட குர்ஆனின் ஒரு பகுதி என்று நம்பிய விஷயங்கள், பின்னர் சாத்தான் என்பவனிடமிருந்து வந்தவை என்று கூறப்படுகின்றன: “(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை. எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கிய பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.” (குர்ஆன் 22:52)
இந்த வசனங்களை ரத்துசெய்ய வேண்டியிருந்தது. இருப்பினும், இந்தச் சிக்கலுக்கு பைபிளுடன் எந்த தொடர்புமில்லை. முஸ்லீம்களுக்கு பைபிள் பற்றிய பல தவறான புரிந்துணர்வுகளில் ஒன்று, அது குர்ஆனைப் போன்றது அல்லது அதைப் போன்றே செயல்படுகிறது என்பதேயாகும். இது முற்றிலும் உண்மையில்லை. பைபிள் பழைய ஏற்பாட்டின் மோசே மற்றும் தீர்க்கதரிசிகள் காலத்திலும் அல்லது புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலர்கள் காலத்திலும் பார்த்து கேட்டதன் அடிப்படையில் நம்பிக்கை கொண்ட விசுவாசிகளுக்கு கற்பிப்பதற்காக எழுதப்பட்டது. அது நம்பிக்கையற்றவர்களுக்கு ஒரு சவாலாகவோ அல்லது விசுவாசிகளை உருவாக்குவதற்காகவோ எழுதப்படவில்லை. பைபிளில், பரிசுத்த ஆவி உங்களைப் பாவத்தைக் குறித்து கண்டித்துணர்த்துவதன் மூலமும், பிதா உங்களுக்கு மனந்திரும்புதலை வழங்குவதன் மூலமும் நீங்கள் விசுவாசியாகிறீர்கள். |