Previous Chapter -- Next Chapter?
17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி இரண்டு:இஸ்லாத்தின் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 3: அடிப்படை நம்பிக்கைகள்
3.6. அடிப்படை நம்பிக்கை 6: விதியில் நம்பிக்கை
இஸ்லாத்தில் முழுமையான தலைவிதி அல்லது தெய்வீக திட்டம் என்ற நம்பிக்கை கற்பிக்கப்படுகிறது. இதன் அர்த்தம், அல்லா ஒவ்வொரு நிகழ்வையும் செயலையும் நேரடியாக படைக்கிறார். பெரும்பாலான இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகளில் இது மிகவும் தெளிவாக உள்ளது, பெரும்பாலான முஸ்லீம்களாலும் இது உறுதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சில இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகள் சுதந்திரமான விருப்பத்தை முழுவதுமாக மறுக்கின்றன, சில குறைந்த அளவிலான சுதந்திர விருப்பத்தைக் கொடுக்கின்றன.
ஆதாமின் வழித்தோன்றல்களின் தலைவிதி அவர்கள் பிறப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது என்று குர்ஆன் கூறுகிறது:
“உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து "நான் உங்களுடைய இறைவன் அல்லவா?" என்று கேட்டதற்கு, அவர்கள் "மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்" என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக (ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.” (குர்ஆன் 7:172)
முகமது நபி அவர்கள் இதைப் பற்றி ஒரு ஹதீஸில் கூறியதாகக் கூறப்படும் விஷயங்கள் உள்ளன:
"அல்லா ஆதம் அவர்களை படைத்து, அவரது சந்ததியிலிருந்து மனிதர்கள் அனைவரையும் வெளிப்படுத்தி, “இவர்கள் சுவர்க்கத்திற்கு செல்பவர்கள், எனக்கு கவலை இல்லை. இவர்கள் நரகத்திற்கு செல்பவர்கள், எனக்கு கவலை இல்லை” என்று கூறினான்."
அது மேலும் இவ்வாறு கூறுகிறது:
முகமது நபியின் தோழர்களில் ஒருவர், "அப்படியானால் ஏன் வேலை செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அவர், "தலைவிதிப்படி" என்று பதிலளித்தார். (Sahih Ibn Hibban)
இஸ்லாமிய மத நம்பிக்கையான அல்லாஹ்வின் விருப்பமே எல்லாம் என்பதன் காரணமாக, முஸ்லீம்கள் தங்கள் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளிலும் கொண்டிருக்கும் கண்ணோட்டங்களிலும் இது எதாவது ஒரு அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.