Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 17-Understanding Islam -- 018 (AXIOM 5: Belief in the Day of Judgement)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி இரண்டு:இஸ்லாத்தின் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 3: அடிப்படை நம்பிக்கைகள்

3.5. அடிப்படை நம்பிக்கை 5: நியாயத்தீர்ப்பு நாளில் நம்பிக்கை


நம்பிக்கையின் ஐந்தாவது தூண் நியாயத் தீர்ப்பு நாளில் நம்பிக்கை. அந்த நாளில், மனித குலம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படும்: ஒரு பிரிவினர் சொர்க்கத்திற்கும், மற்றொரு பிரிவினர் நரகத்திற்கும், மூன்றாவது பிரிவினர் அல்-அஃராஃப் (உயர்ந்த இடங்கள் - கத்தோலிக்க மதத்திலுள்ள உத்தரிக்கும் ஸ்தலம் போன்ற கருத்து) எனப்படும் இடைப்பட்ட இடத்திற்கும் செல்வார்கள். சொர்க்கம் மற்றும் நரகம் இடையே ஒரு தடை இருக்கும். இந்த இடம் குர்ஆனில் சொர்க்கம் மற்றும் நரகம் பற்றிய விளக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. குர்ஆன் கூறுவது இதுதான்:

[அல்லா] 'உங்களுக்கு முன் சென்ற ஜின் மற்றும் மனிதர்களின் சமூகங்களுடன் நெருப்புக்குள் நுழையுங்கள்' என்று கூறுவார். ஒவ்வொரு சமூகமும் நெருப்புக்குள் நுழையும் போதும், தங்களை வழிதவற செய்தவர்களை சபிக்கும். இறுதியில், அனைவரும் நெருப்புக்குள் நுழைந்த பிறகு, கடைசி சமூகம் முதல் சமூகத்தைப் பார்த்து, 'எங்கள் இறைவா, இவர்கள் எங்களை வழிதவற செய்தார்கள், எனவே இவர்களுக்கு இரட்டிப்பான நெருப்பு வேதனையைத் தருவீராக!' என்று கூறும். “‘ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பான தண்டனை உண்டு, ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்’ என்று கூறுவான்.” "முந்தைய சமூகம் பிந்தைய சமூகத்தைப் பார்த்து, 'எங்களுக்கு நீங்கள் எந்த நன்மையும் செய்யவில்லை. எனவே நீங்கள் செய்த பாவங்களுக்கான தண்டனையை அனுபவிப்பீர்கள்' என்று கூறும். நிச்சயமாக, நம் வசனங்களை மறுத்து, அவற்றைப் பழிப்பவர்களுக்கு வானத்தின் கதவுகள் திறக்கப்பட மாட்டாது. ஒரு ஒட்டகம் ஊசியின் காதில் நுழையும் வரை அவர்கள் சுவர்க்கத்திற்குள் நுழைய முடியாது." “இவ்வாறே குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்குகிறோம்.” நரகத்தில் அவர்களுக்கு படுக்கையாகவும், மேலே போர்வைகளாகவும் தீயே இருக்கும். இவ்வாறே குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்குகிறோம். ஆனால் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்தவர்கள் மீது - நாம் எந்த மனிதனுக்கும் அவனது திராணியை விட அதிகமான சுமையைச் சுமத்துவதில்லை. அவர்கள் சொர்க்கத்தின் தோழர்கள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள். அவர்களின் மனங்களிலிருந்து எந்த விதமான கசப்பையும், வெறுப்பையும் நீக்கி விடுவோம். அவர்கள் இருக்கும் இடத்தின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள், ‘எல்லாப் புகழும் அல்லாவுக்கே! அவன்தான் நம்மை இங்கு வழிநடத்தி வந்தான். அல்லாவின் வழிகாட்டல் இல்லாதிருந்தால் இதை அடைய முடியாமல் இருந்திருப்போம்’ என்று நன்றியுடன் கூறுவார்கள். நிச்சயமாக, நம் இறைவனின் தூதர்கள் உண்மையுடனேயே வந்தார்கள்.' அவர்களை அழைத்து, 'இது சொர்க்கம், நீங்கள் செய்துவந்த நற்செயல்களுக்காக இது உங்களுக்கு சொந்தமாகக் கொடுக்கப்பட்டுள்ளது' என்று சொல்லப்படும். சொர்க்கத்தில் வாழ்பவர்கள் தீயில் இருப்பவர்களை நோக்கி இவ்வாறு கூறுவார்கள், “எங்கள் இறைவன் எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதி உண்மை என்பதை நாங்கள் ஏற்கனவே உணர்ந்திருக்கிறோம். உங்கள் இறைவன் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதி உண்மையா என்றறிந்து கொண்டீர்களா?” ‘ஆம்’ என்று அவர்கள் பதிலளிப்பார்கள். அப்போது, ‘தவறான வழியில் சென்றவர்கள் மீது அல்லாவின் சாபம் இருக்கும்’ என்று அவர்களிடையே ஒருவர் அறிவிப்பார். “அவர்கள் மக்களை அல்லாவின் பாதையை விட்டு திசைத்திருப்பிவிட்டார்கள், மறுமை பற்றி நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தும், அதை வளைத்து தவறான வழியாகக் காட்ட முயன்றவர்கள்.” அவர்களுக்கு இடையே ஒரு தடை இருக்கும், அதன் உயர்ந்த இடங்களில் மக்களை அவர்களின் அடையாளங்களைக் கொண்டு அனைவரையும் அறிந்திருக்கும் மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள், சொர்க்கத்திலிருக்கும் மக்களை நோக்கி, ‘உங்களுக்கு சமாதானம் நிலவட்டும்’ என்று கூறி மனதார வாழ்த்துகிறார்கள். அவர்கள் இன்னும் சொர்க்கத்திற்குச் செல்லவில்லை என்றாலும், அதை அடைய மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள். நரகத்திலிருக்கும் துன்பத்தைப் பார்த்ததும், அவர்கள் சொர்க்கத்தின் தோழர்களைப் பார்க்கிறார்கள். அப்போது, ‘எங்கள் இறைவா, தவறான வழியில் செல்பவர்களுடன் எங்களைச் சேர்க்காதே’ என்று வேண்டிக்கொள்கிறார்கள். உயரங்களிலிருக்கும் மனிதர்கள், நரகத்தில் வேதனைப்படும் சிலரை அடையாளம் கண்டு அவர்களை நோக்கி, ‘உங்கள் உலகத்தில் நீங்கள் ஒன்று கூடி வந்ததும், உங்கள் கொடிய செயல்களும், உங்களுக்கு இப்போது எந்தப் பயனையும் தராது’ என்று கூறுவார்கள். இவர்கள்தானா, அல்லா கருணையை காட்ட மாட்டான் என்று சத்தியம் செய்தவர்கள்?” என்று அல்லா கேட்பான். ‘உயரங்களிலிருக்கும் நேர்மையானவர்களே, அல்லாவின் கருணையால் சொர்க்கத்திற்குள் செல்லுங்கள்’. ‘உங்களுக்கு எந்த பயமும் இருக்காது, துக்கமும் இல்லை’ நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, "தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்" எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்; "நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்" என்று கூறுவார்கள்.”(குர்ஆன் 7:36-50)

இந்த மர்மமான காட்சியை விளக்க, முஸ்லீம்கள் சொர்க்கம், நரகம் மற்றும் இடையிலுள்ள இடத்தைப் பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் முகமது கூறியதாக நூற்றுக்கணக்கான கதைகள் முஸ்லீம்களிடம் உள்ளன. முகமது கூறியதாவது:

மகிமைப்படுத்தப்பட்ட போற்றப்பட்ட அல்லா இவ்வாறு கூறினான்: "நான் என் நேர்மையான அடியார்களுக்கு எதைத் தயார் செய்துள்ளேனோ, அது எந்த கண்ணும் பார்த்ததில்லை, எந்தக் காதும் கேட்டதில்லை, எந்த மனிதனின் மனதிலும் எழுந்ததில்லை, அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்ததைத் தவிர" என்று அல்லா கூறினான் (ஸஹீஹ் முஸ்லீம்) - ஆம், இது 1 கொரிந்தியர் 2:9 மற்றும் ஏசாயா 64:4 ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது. முகம்மது நபி மறுமை நாள் எப்படி தொடங்கும் என்பது பற்றி பல விவரங்களை வழங்கினார். மக்கள் (மறுமை நாளில்) அல்லாவை சந்திப்பார்கள் (அப்போது அவர்கள்) காலணியின்றி, ஆடைகளின்றி, கால்களால் நடந்து, சுன்னத் செய்யப்படாமல் இருப்பார்கள். (ஸஹீஹ் புகாரி)

குர்ஆனைப் பொறுத்தவரை, எக்காளம் ஊதப்பட்ட பிறகு, ஒரு தராசு (நீதித் தராசு) நிறுத்தப்படும்:

“எனவே ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள். எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள். ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்; அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்.” (குர்ஆன் 23:101-103)

இந்த தராசு உண்மையானதா அல்லது உருவகமா என்பது குறித்து முஸ்லீம்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

அதற்குப் பிறகு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே ஒரு பாலம் தோன்றும். முகமது பாலம் கட்டுவதை பற்றி இப்படி விவரிக்கிறார்:

“எல்லாம் வல்ல இறைவன், அவர்கள் முதலில் பார்த்ததைத் தவிர வேறு ஒரு தோற்றத்தில் அவர்களிடம் வருவார், ‘நான் உங்கள் இறைவன்’ என்று கூறுவார், அவர்களும் ‘நீங்கள் எங்கள் இறைவன்’ என்று கூறுவார்கள். அப்போது தீர்க்கதரிசிகளைத் தவிர வேறு எவரும் அவரிடம் பேச முடியாது. பின்னர் அவர்களிடம், ‘அவரை அடையாளம் காண உங்களுக்கு ஏதேனும் அடையாளம் தெரியுமா?’ என்று கேட்கப்படும். அவர்கள், ‘ஷின்’ (முன்னங்கால்) என்று கூறுவார்கள். அப்போது, அல்லா தனது ஷினை (முன்னங்கால்) திறந்து காட்டுவார். அதைக் கண்ட பின்னர், உண்மையான விசுவாசிகள் அனைவரும் அவரிடம் ஸஜ்தா (சாஷ்டாங்கம்) செய்வார்கள். ஆனால், புகழ்ச்சிக்காகவும் நற்பெயர் பெறுவதற்காகவும் அவரிடம் ஸஜ்தா செய்து வந்தவர்களும் இருப்பார்கள்.” அத்தகையவர்களில் ஒருவர் ஸஜ்தா (சாஷ்டாங்கம்) செய்ய முயற்சிப்பார், ஆனால் அவரது முதுகு (எலும்புகள்) ஒரே தண்டாக (ஒற்றை முதுகு தண்டு எலும்பு போல்) மாறிவிடும் (மரக்கட்டை போன்ற ஒரே துண்டாக), அவர் ஸஜ்தா செய்ய முடியாமல் போய்விடுவார். பின்னர், அந்த பாலம் கொண்டு வரப்பட்டு நரகத்தின் குறுக்கே அமைக்கப்படும்.

பாலம் பற்றி தெளிவான விளக்கம் அளிக்கும்படி கேட்டபோது, நபிகள் நாயகம் இவ்வாறு சொன்னார்:

“ஒரு பக்கம் அகலமாகவும் மறுபக்கம் குறுகலாகவும் இருக்கும், வளைந்த முட்கள் கொண்ட முட்செடி போன்ற கொக்கிகளும் கவ்விகளும் பொருத்தப்பட்ட, வழுக்கும் பாலம் அது. குத்தூசி போன்ற முட்கள் கொண்ட ஒரு விதை நஜதில் காணப்படுகிறது. அதை சதான் என்று அழைக்கிறார்கள். சில விசுவாசிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாலத்தை கடந்து விடுவார்கள், சிலர் மின்னல் வேகத்திலும் சிலர் காற்றின் வேகத்திலும், சிலர் பாயும் குதிரை வேகத்திலும் பெண் ஒட்டகங்களின் வேகத்திலும் கடப்பார்கள். எனவே, சிலர் எந்த தீங்கும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பார்கள்; சிலர் சில கீறல்களைப் பெற்ற பிறகு பாதுகாப்பாக இருப்பார்கள்; சிலர் நரகத்தீயில் விழுவார்கள். கடைசி நபர் இழுத்துச் செல்லப்படுவது போல் பாலத்தைக் கடப்பார்” என்று கூறப்பட்டுள்ளது. (ஸாஹீஹ் புகாரி)

அடுத்த சம்பவம்:

சுவர்க்கத்தின் மக்கள் சுவர்க்கத்திற்குச் செல்லும்போதும், நரகத்தின் மக்கள் நரகத்திற்குச் செல்லும்போதும், மரணம் கொண்டு வரப்பட்டு சுவர்க்கம் மற்றும் நரகத்திற்கு இடையில் வைக்கப்படும். அப்போது அது அறுக்கப்பட்டு, ஒருவர் முழக்கமிட்டு, "சுவர்க்கத்தின் மக்களே, இனி மரணம் இல்லை; நரகத்தின் மக்களே, இனி மரணம் இல்லை" என்று கூறுவார். பின்னர் சுவர்க்கத்தின் மக்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும், நரகத்தின் மக்களின் துன்பம் அதிகரிக்கும். (ஸாஹீஹ் முஸ்லீம்).

இஸ்லாமிய மறுமை நாளின் நிகழ்வுகளுக்கான காலவரிசை முறையான ஒழுங்கை நிறுவுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஏனென்றால், ஹதீஸ் தொகுப்புகள் (சுன்னி முஸ்லீம்களால் நம்பகமானதாகக் கருதப்பட்டுபவை) ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன, மேலும் இஸ்லாமிய அறிஞர்களுக்கும் இதில் உடன்பாடில்லை.

கடைசி நாளுக்கு முன்பு நடக்க வேண்டிய பல விஷயங்களை முஸ்லீம்கள் கண்டிப்பாக நம்ப வேண்டாம். சில முஸ்லீம்கள் பத்து அடையாளங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள், ஏனென்றால் ஒரு ஹதீஸின்படி, முகமது நபி, "நீங்கள் பத்து அடையாளங்களைப் பார்க்கும் வரை அது (இறுதி நாள்) வராது" என்று கூறினார் (ஸாஹீஹ் முஸ்லீம்). அதன் பிறகு அவர் அடையாளங்களைப் பற்றி குறிப்பிட்டார்:

  1. புகை
  2. அல்-தஜ்ஜால் (அந்திக் கிறிஸ்து)
  3. பேசும் மிருகம்
  4. சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
  5. மரியத்தின் சந்ததியான ஈசா (இயேசு மீண்டும் வருவார், இறப்பதற்கு முன் திருமணம் செய்துகொள்பவர்)
  6. யாஜூஜ் மற்றும் மஃஜூஜ் (கோகு மற்றும் மாகோகு)
  7. மூன்று நிலச்சரிவுகள்: கிழக்கே ஒன்று, மேற்கே ஒன்று, அரேபிய தீபகற்பத்தில் ஒன்று
  8. ஏமனிலிருந்து அக்கினி வெளிப்பட்டு மக்களை அவர்கள் கூடும் இடத்திற்குத் தள்ளும் (ஸாஹீஹ் முஸ்லீம்).

இந்த பத்து விஷயங்களில் ஒவ்வொன்றை பற்றியும் மேலும் விவரங்கள் பல்வேறு ஹதீஸ் தொகுப்புகளிலும் குர்ஆன் விளக்கவுரைகளிலும் வழங்கப்பட்டுள்ளன, ஆனால் அது குழப்பமான வாசிப்பிற்கு வழிவகுக்கும். இஸ்லாத்தில், இறுதித் தீர்ப்பு நாளுக்கு முன் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நடக்க வேண்டும்; அவர் சிலுவையை உடைக்கவும், பன்றியைக் கொல்லவும், திருமணம் செய்து மரிக்கவும் வர வேண்டும், மேலும் அவர் முகமது அருகே அடக்கம் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

www.Grace-and-Truth.net

Page last modified on April 13, 2026, at 01:45 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)