Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 17-Understanding Islam -- 027 (CHAPTER FIVE: ISLAMIC UTOPIA)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter?

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி இரண்டு:இஸ்லாத்தின் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் புரிந்துகொள்ளுதல்

அத்தியாயம் 5 : இஸ்லாத்தின் யுதோப்பியா


இப்புத்தகத்தின் நோக்கம் பெரும்பாலும் பிற இஸ்லாமிய நம்பிக்கைகளைப் பற்றிய விவாதத்தை உள்ளடக்காவிட்டாலும், இந்த சிறிய அத்தியாயத்தில் மற்றொரு பகுதியைக் குறிப்பிடுவது அவசியம்: இஸ்லாமிய யுதோபியா கருத்து.

திட்டவட்டமாக ஒவ்வொரு தத்துவமும், மதமும் ஒரு செம்மையான சமுதாயம் பற்றிய கருத்தைக் கொண்டிருக்கும், இஸ்லாம் அதற்கு விதிவிலக்கல்ல. வேறு எந்த மதத்திலும், தத்துவத்திலும் கூட, இத்தகைய பரிபூரண சமுதாயம் எதிர்கால இலக்காகவே இருக்கும், அதை நோக்கி பாடுபட வேண்டியதோ, முன்னேற்றம் அடைய வேண்டியதோ இருக்கும். இஸ்லாத்தின் விஷயத்தில் இப்படி இல்லை; முதல் தலைமுறை இஸ்லாத்தின் போது பரிபூரண இஸ்லாமிய சமுதாயம் ஏற்கனவே இருந்தது. முகமது இதை இவ்வாறு கூறினார்:

நபிகள் நாயகம்,‘உங்களில் சிறந்தவர்கள் என்னுடைய சமகாலத்தவர்கள் (என் தலைமுறை) அதற்குப் பிறகு வருபவர்கள் அடுத்த தலைமுறை ஆவார்கள்’ என்று கூறினார். (ஸாஹீஹ் புகாரி).

இஸ்லாத்தில் செம்மையான சமுதாயம் எதிர்கால இலக்காக இல்லாமல் கடந்த காலத்திலிருந்தது என்ற கருத்து, ஏன் அதிகரித்து வரும் முஸ்லீம்கள் கடந்த காலத்தை துல்லியமாக மீண்டும் வாழ முயற்சிப்பதை விளக்கலாம். இது அவர்கள் உடை அணிவது, தோற்றம், அவர்கள் விரும்பும் சமுதாய அமைப்பு, அத்தகைய சமுதாயத்தை எவ்வாறு ஆள வேண்டும் போன்ற அனைத்திலும் பிரதிபலிக்கும். இது இதுவரை சில இஸ்லாமிய குழுக்களாலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சூடான் போன்ற நாடுகளாலும் பல முறை முயற்சிக்கப்பட்டுள்ளது; ஒவ்வொரு முறையும் அது பரிபூரண சமுதாயமாக மாறவில்லை என்றால், நாம் அதை முழுமையாகப் பெறவில்லை என்று அர்த்தம், நாம் என்ன மறந்துவிட்டோம் என்று கண்டறிய வேண்டும் என்கிறார்கள். இது மேலும் பின்னடைவுக்கு வழிவகுக்கும், ஏனென்றால் சில முஸ்லீம்களுக்கு "பரிபூரண சமுதாயம்" என்பது ஏழாம் நூற்றாண்டு அரேபியாவைப் போலவே துல்லியமாக வாழ்வதாகும், அதனுடன் நவீன வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதற்கு தயக்கமும் காணப்படும்.

1922-ஆம் ஆண்டு ஒட்டோமான் சுல்தானகம் வீழ்ந்ததிலிருந்து கடந்த நூறு ஆண்டுகளாக இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறும் இஸ்லாமிய குழுக்கள் மற்றும் நாடுகளின் தோற்றத்தை நாம் பார்த்தால், ஒவ்வொரு குழுவும் அதற்கு முந்தைய குழுவை விட அதிக தீவிரவாதமாக இருக்கும் போக்கு காணப்படுகிறது. இதன் விளைவாக, கடந்த நூறு ஆண்டுகளில் முகமது நபியின் நடைமுறைகளை மிகவும் நெருக்கமாகப் பின்பற்ற முயற்சிக்கும் முயற்சியில் அரசியல் இஸ்லாமிய குழுக்களுக்கு இடையே வன்முறை அதிகரித்துள்ளதுடன், உலகம் முழுவதும் ஷரியத் (இஸ்லாமிய சட்டம்) அமல்படுத்த விரும்பும் முஸ்லீம்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

www.Grace-and-Truth.net

Page last modified on April 20, 2026, at 03:26 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)