Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 17-Understanding Islam -- 028 (CHAPTER SIX: CHRIST IN ISLAM)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி மூன்று: முஸ்லீம் கிறிஸ்துவைப் புரிந்துகொள்ளுதல்

அத்தியாயம் 6: இஸ்லாத்தில் கிறிஸ்து


இஸ்லாம் கிறிஸ்துவை ஐந்து முக்கிய தீர்க்கதரிசிகளில் ஒருவராக அங்கீகரிக்கிறது. இஸ்லாத்தில் அரபு மொழியில் அவரது பெயர் ஈஸா ஆகும், இது எபிரேய அல்லது அராமிக் என்பதை விட அவரது கிரேக்க பெயரிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். மறுபுறம், அரபு கிறிஸ்தவர்கள் அவரை Yasuuʽ என்று அழைக்கிறார்கள், இது அவரது எபிரேய பெயரான யேஷுவா என்பதிலிருந்து பெறப்பட்டது. இஸ்லாமின் படி, கிறிஸ்து ஒரு சாதாரண மனிதர், ஒரு தூதர் (கடவுளிடமிருந்து ஒரு செய்தியை கொண்டு வந்த தீர்க்கதரிசி, இந்த விஷயத்தில் மேலே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி இன்ஜீல்), மற்றும் முகமதுவின் வருகையை முன்னறிவித்தவர். குர்ஆன் அவரை அல்-மஸீஹ் ஈஸா (மேசியா - அல்லது கிறிஸ்து - இயேசு) அல்லது மர்யமின் மகன் என்று குறிப்பிடுகிறது. இந்தப் புத்தகத்தில் நான் முதன்மையாக கிறிஸ்து என்ற தலைப்பைப் பயன்படுத்துகிறேன், ஏனெனில் கிறிஸ்தவமும் இஸ்லாமும் அவருக்காக இதைப் பயன்படுத்துகின்றன, மேலும் அரேபிய கிறிஸ்தவர்கள் பயன்படுத்தாத மற்றும் இறையியல் சமரசத்தை பரிந்துரைக்கும் பெயரை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்கவும், உங்கள் முஸ்லீம் தொடர்புகள் எதிர்க்கக்கூடிய பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், முஸ்லீம்களுடனான உங்கள் ஆரம்ப கலந்துரையாடல்களில் கிறிஸ்து என்பதையே பயன்படுத்த பரிந்துரைக்கிறேன். இரு தரப்பினரும் பயன்படுத்தும் பெயரைப் பயன்படுத்துவது விவாதத்தை முன்னோக்கி நகர்த்த உதவும், இருப்பினும் (உங்கள் விவாதங்களில் தெளிவாக இருங்கள்!) இஸ்லாமின் கிறிஸ்து பைபிளின் கிறிஸ்துவைப் போலவே இருக்கிறார் என்பதை நாம் ஒப்புக்கொள்ளவில்லை.

வேதாகமம் கிறிஸ்துவை தேவனின் அவதாரமாக, இரட்சகராக, மீட்பராக நமக்கு முன்வைக்கிறது. பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என எந்த இடத்திலும் வேதாகமம் அவரை வெறும் மனிதராக சித்தரிக்கவில்லை; அவரே வணங்கப்பட வேண்டியவர், தம்முடைய ஜனங்களை இரட்சிக்கிறவர். இறையியலாளர் C.S. லூயிஸ் கிறிஸ்தவம் மட்டுமே என்ற தனது புத்தகத்தில் இந்த விஷயத்தை எடுத்துக்காட்டுகிறார்:

"இயேசுவைப் பற்றி மக்கள் பெரும்பாலும் கீழ்காணும் விதத்தில் சொல்லும் முட்டாள்தனமான விஷயத்தை யாரும் சொல்வதைத் தடுக்க இங்கே முயற்சிக்கிறேன்: இயேசுவை ஒரு மாபெரும் நீதிநெறி போதகராக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன், ஆனால் அவர் கடவுள் என்று அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த ஒரு காரியத்தை நாம் சொல்லக்கூடாது. வெறுமனே ஒரு மனிதனாக இருந்து, இயேசு சொன்ன விதத்தில் விஷயங்களைச் சொன்ன ஒரு மனிதன் ஒரு பெரிய ஒழுக்க போதகராக இருக்க முடியாது. அந்த மனிதன் ஒரு பைத்தியக்காரன் - தான் ஒரு வேக வைக்கப்பட்ட முட்டை என்று சொல்லும் மனிதரைப் போன்றவர் - அல்லது அவர் நரகத்தின் பிசாசு ஆவார். நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். இந்த மனிதர் கடவுளின் குமாரனாக இருந்தார், இருக்கிறார், அல்லது ஒரு பைத்தியக்காரன் அல்லது அதைவிட மோசமானவர். ஒரு முட்டாள் என்று அவரது வாயை அடைக்கலாம், அவர் மீது காறி உமிழ்ந்து பிசாசு என்று அவரைக் கொல்லலாம் அல்லது அவர் காலில் விழுந்து அவரை ஆண்டவரே, கடவுளே என்று அழைக்கலாம், ஆனால் அவர் ஒரு சிறந்த மனித போதகர் என்ற முட்டாள்தனத்துடன் நாம் வர வேண்டாம். அவரை வெறும் சிறந்த மனித போதகர் என்று மதிப்புக் குறைவாக பேச வேண்டாம். அவர் அந்த வாய்ப்பை நமக்கு தந்துவிடவில்லை. அது அவரது நோக்கமும் இல்லை.”

லூயிஸ் குறிப்பிடுவது போல், கிறிஸ்து ஒரு சிறந்த மனித போதகர் என்ற பார்வை முட்டாள்தனத்தை ஆதரிக்கிறது, இப்படிப் பேசும் வாய்ப்பை அவர் நமக்குக் கொடுக்கப்படவில்லை. ஆயினும் முஸ்லீம்கள் கிறிஸ்துவை இப்படித்தான் பார்க்கிறார்கள். இஸ்லாம் கிறிஸ்துவை மிகப் பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவராக, அற்புதம் செய்பவராக, ஒரு சிறந்த போதகராக, பாவமற்றவராகக் குறிப்பிடுகிறது, ஆனால் அவரை சாதாரண மனிதராகவே முன்வைக்கிறது. கிறிஸ்துவின் ஆசாரியத்துவத்தை, சிலுவை மரணத்தை, அவரது தெய்வீகத்தன்மையை இஸ்லாம் முற்றிலுமாக மறுக்கிறது. குர்ஆனையும் பைபிளையும் முற்றிலும் முரண்பட வைக்க இது போதுமானது, ஆனால் இஸ்லாமில் கிறிஸ்து மிகவும் சிக்கலான விஷயமாகும், இதில் எந்தவொரு ஒற்றை தீர்மானத்துக்கும் வருவது சற்று கடினம்.

கிறிஸ்து குர்ஆனில் 90 முறைக்கு மேல் குறிப்பிடப்படுகிறார், நாம் கிறிஸ்துவைப் பற்றி பேசும்போதெல்லாம் முஸ்லீம்களின் எண்ணங்கள் தானாகவே திரும்பும். முஸ்லீம்களைப் பொறுத்தவரை, குர்-ஆன் எது முரண்பட்டாலும் சரியானது. குர்ஆனில் உள்ள ஒரு வசனம் தர்க்கம், அறிவியல், சொந்த அனுபவம், அறிவியல் பரிசோதனை மற்றும் வரலாறு ஆகியவற்றுடன் முரண்பட்டாலும், தான் அப்போதும் குர்ஆனில் உள்ள வசனத்தையே நம்புவதாகவும் மற்றும் மற்ற அனைத்தையும் நிராகரிப்பதாகவும் ஒரு மெத்தப் படித்த முஸ்லீம் என்னிடம் ஒருமுறை கூறினார். அதாவது, எப்பொழுதெல்லாம் இஸ்லாமின் கிறிஸ்துவுக்கும், பைபிளின் கிறிஸ்துவுக்கும் இடையே முரண்பாடு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் முஸ்லீம்கள் வேதாகமத்தின் பார்வையை நிராகரிப்பார்கள்.

கிறிஸ்து எப்படி இஸ்லாத்தில் முன்வைக்கப்படுகிறார்? வேதாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ள கிறிஸ்துவை இஸ்லாம் மறுதலிக்கின்றது என்ற போதிலும், முகமது உட்பட வேறு எவருக்கும் வழங்கப்படாத ஒரு பதவியையும் பண்புகளையும் குர்ஆன் கிறிஸ்துவுக்கு வழங்கியுள்ளது. குர்ஆனில் கிறிஸ்துவுக்கு கூறப்படும் சில காரியங்கள் மற்ற தீர்க்கதரிசிகளுக்கும் கூறப்பட்டிருந்தாலும் - அற்புதங்கள் போன்றவை, மோசேயும் செய்ததாக பலவற்றை குர்ஆன் சொல்கிறது - இந்த பண்புகள் அனைத்தையும் ஒன்றிணைப்பதன் மூலம் கிறிஸ்து வேறுபடுத்திக் காட்டப்படுகிறார். இந்த அத்தியாயத்தின் மீதமுள்ள பகுதி கிறிஸ்து இஸ்லாமிலுள்ள மற்ற தீர்க்கதரிசிகளிடமிருந்து தனித்து நிற்கும் ஒன்பது வழிகளைப் பார்க்கும். குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ள பின்வரும் இரண்டு அத்தியாயங்கள் கிறிஸ்துவின் அற்புதங்களை இன்னும் ஆழமாகப் பார்க்கும். பின்னர் கிறிஸ்துவின் தெய்வீக தன்மையை இஸ்லாம் நிராகரிப்பதைப் பார்க்கும்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 21, 2026, at 04:47 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)