Home
Links
Contact
About us
Impressum
Site Map?


Afrikaans
عربي
বাংলা
Dan (Mande)
Bahasa Indones.
Cebuano
Deutsch
English-1
English-2
Español
Français
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
മലയാളം
O‘zbek
Peul
Português
Русский
Soomaaliga
தமிழ்
తెలుగు
Türkçe
Twi
Українська
اردو
Yorùbá
中文



Home (Old)
Content (Old)


Indonesian (Old)
English (Old)
German (Old)
Russian (Old)\\

Home -- Tamil -- 17-Understanding Islam -- 082 (Objections about Christ's crucifixion and resurrection)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu? -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஐந்து: கிறிஸ்தவத்துக்கான முஸ்லீம்களின் எதிர்ப்பைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 13: கிறிஸ்தவத்துக்கு இஸ்லாமின் எதிர்ப்பு

13.4. கிறிஸ்து சிலுவையில் மரித்தல் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றிய சந்தேகங்கள்


மூன்று பொதுவான மறுப்புக்களைப் பற்றி விவாதித்த பிறகு, இப்போது பொதுவாகக் கடைப்பிடிக்கப்படும் மற்றொரு இஸ்லாமிய நம்பிக்கையைப் பார்ப்போம், அதாவது சிலுவையில் மரண தண்டனை இருந்தாலும், சிலுவையில் இருந்தவர் இயேசு அல்ல, மாறாக அவரைப் போன்ற தோற்றம் கொண்ட வேறொருவர் என்று கூறுகிறது.

உண்மையில், குர்ஆனில் சிலுவையில் மரண தண்டனை பற்றி ஒரு வசனம் மட்டுமே உள்ளது, இந்த வசனம் மூல அரபு மொழியில் தெளிவற்றதும் சந்தேகத்திற்கிடமான அர்த்தத்தைத் தரக்கூடியது. எனவே, வசனத்தின் எழுத்தின்படியான மொழிபெயர்ப்பு இவ்வாறிருக்கிறது:

“இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.” (குர்ஆன் 4:157)

இங்கு "அவர்களைப் போல் தோற்றமுள்ளவர்" (shubbiha lahum) என்று மொழிபெயர்க்கப்பட்ட சொற்கள் பல்வேறு விதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன:

  1. Sahih International: “ஆனால் அவரைப் போல் மற்றொருவர் அவர்களுக்குக் காட்டப்பட்டார்”.
  2. Pickthall: “ஆனால் அது அவர்களுக்கு அவ்வாறு தோன்றியது”
  3. Yusuf Ali: “ஆனால் அது அவர்களுக்கு அவ்வாறு தோன்றும்படிச் செய்யப்பட்டது”
  4. Shakir: “ஆனால் அது அவர்களுக்கு இயேசுவைப் போல் தோன்றியது.”
  5. Muhammad Sarwar: “உண்மையில், அவர்கள் தவறுதலாக வேறு ஒருவரைக் கொலை செய்தனர்”
  6. Mohsin Khan: “ஆனால் இயேசுவின் தோற்றம் வேறொரு மனிதர் மீது வைக்கப்பட்டது (அந்த மனிதரைக் கொன்றனர்) ”
  7. Arberry: “அதன் ஓர் சாயல் மட்டுமே அவர்களுக்குக் காட்டப்பட்டது”
  8. Kamal Omar: “மாறாக அது அவர்களுக்கு சந்தேகத்திற்கிடமான சம்பவமாகவே இருந்தது”
  9. Mohammed Ahmed & Samira: “ஆனால் (அது) அவர்களுக்கு ஒத்திருந்தது / தெளிவற்றது / சந்தேகத்திற்கிடமானதாக இருந்தது”
  10. Wahiduddin Khan: “ஆனால் அது அவர்களுக்கு (அவ்வாறு இருந்தது போல்) தோன்றியது மட்டுமே”
  11. Qaribullah & Darwish: “ஆனால் அவர்களுக்கு, அவர் (சிலுவையில் அறையப்பட்டவர்) (நபி ஈசா அவர்களின் தோற்றத்தைப் பெற்றிருந்தார்”
  12. Maududi: “ஆனால் அந்த விஷயம் அவர்களுக்கு சந்தேகத்திற்கிடமானதாக ஆக்கப்பட்டது”
  13. Asad: “(அவ்வாறு இருந்தது போல்) அவர்களுக்குத் தோன்றியது மட்டுமே”
  14. Khatab: “அது அவ்வாறு தோன்றச் செய்யப்பட்டது மட்டுமே”
  15. Malik: “ஆனால் அந்த விஷயம் அவர்களுக்கு சந்தேகத்திற்கிடமானதாக ஆக்கப்பட்டது என்பதால் அவர்கள் அவ்வாறு செய்ததாக நினைத்தார்கள்”
  16. Laela Bakhtiar: “மாறாக, அவருக்கு மற்றொருவரின் சாயல் அவர்களுக்குக் காட்டப்பட்டது”
  17. T.B. Irving: “அது அவர்களுக்கு அவ்வாறு தோன்றியிருந்தாலும்”
  18. Unman: “ஆனால் உருவ ஒற்றுமையால் அவர்கள் மயக்கப்பட்டனர்”
  19. Bijan Moeinian: “[வரலாற்று] ஆதாரம் இல்லாததால் அவர்களின் கூற்றுக்கு ஆதரவு இல்லாததால், அவர்களின் ஆசை சிந்தனை மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது”
  20. Amatul Rahaman Omar: “ஆனால் அவர் (சிலுவையில் அறையப்பட்டவர்) அவர்களுக்கு ஒத்திருக்கும்படி செய்யப்பட்டார்”

இதன் மூலம், உண்மையான அர்த்தம் குறித்து தெளிவான ஒத்தக்கருத்து இல்லை என்பதை நீங்கள் காணலாம். இந்த வார்த்தைகள் இருபதுக்கும் மேற்பட்ட வழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, "அவர்களுக்கு அப்படித் தோன்றியது". "வரலாற்று ஆதாரம் இல்லாததால் அவர்களின் கூற்றுக்கு ஆதரவு இல்லை என்பதால், அவர்களின் ஆசை சிந்தனை மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது". இந்தக் குழப்பம் குர்ஆன் விளக்கவுரைகளில் காணப்படுகிறது; சிலர் வேறு ஒருவர் கிறிஸ்துவின் இடத்தைப் பிடித்ததாகவும், வேறு சிலர் இந்த நபர் யூதாஸ் இஸ்காரியோட் என்றும், இன்னும் சிலர் அது இயேசுதான் ஆனால் அவர் இறக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

குர்ஆன் விளக்கவுரையாளர் அல்-ராஸி, இந்த வசனத்திற்கான தனது விளக்கவுரையில், இயேசுவின் தோற்றத்தை வேறு ஒருவர் ஏற்படுத்திக்கொண்டார் என்ற கருத்தைப் பற்றி மிகச் சிறந்த கேள்விகளை எழுப்பினார்.

  1. இந்தத் தோற்ற மாற்றத்தை நாம் ஒப்புக்கொண்டால், அது வஞ்சக வாதம் ஆகிவிடும். ஒரு தடவை என் குழந்தையைப் பார்த்த பிறகு, அடுத்த தடவை பார்க்கும்போது அது என் குழந்தைதான் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது - அது அவனைப் போல தோன்றும் வேறு யாரோ இருக்கலாம். இவ்வாறு கூறினால், நம் உணர்வுகளின் மீதான நம்பிக்கையை அது முற்றிலும் அழித்துவிடும். மேலும் முகமது அவர்களுக்கு கற்பிப்பதைக் கண்ட அவரைப் பின்பற்றுபவர்கள்: ஒருவேளை அவர் முகமது அல்ல, ஆனால் அவரைப் போல் தோன்றிய ஒருவர் என்று கூறினால் எப்படியிருக்கும்?
  2. "ஜிப்ரீல்" என்ற புனித ஆவியால் இயேசு ஆதரிக்கப்பட்டார் என்று குரான் கூறுகிறது, அப்படியானால் அவரைக் காப்பாற்ற வேறு ஒருவரைக் கொல்ல வேண்டிய அவசியம் என்ன?
  3. இயேசுவால் இறந்தவர்களை உயிர்த்தெழுப்ப முடிந்தது, ஏன் அவரால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை?
  4. இயேசுவின் இடத்தில் வேறு யாராவது கொல்லப்பட்டு, அவர் பரலோகத்திற்கு எழுப்பப்பட்டு, அவ்வாறு செய்வதன் மூலம் அவர் சிலுவையில் இருந்ததாகவும், அவர் இறந்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததாகவும் அனைவரையும் நம்ப வைத்தால், அல்லா ஒரு பொய்யை நம்பும்படி அவர்களை ஏமாற்றினான் என்று அர்த்தம்.
  5. கிறிஸ்துவை அன்புடனும் மதிப்புடனும் பார்க்கும் உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும், அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்று நம்புகிறார்கள். இது இட்டுக்கட்டப்பட்ட கதை அல்ல, மற்ற தீர்க்கதரிசிகளுக்கு கிடைத்த சாட்சிகளுடன் ஒப்பிடும்போது, இதை நம்புவதற்கான வலுவான ஆதாரங்கள் இதற்கு இருக்கிறது.
  6. சிலுவையில் இருந்தவர் மணிக்கணக்கில் தொங்கினார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை; அவர் இயேசு அல்ல என்றால், அந்த நபர் நான் இயேசு அல்ல, என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லியிருப்பார்! இப்படி நடக்கவில்லையே.

ராஸி தனது கேள்விக்கான பதிலாக மிகவும் கேலிக்கூத்தான கருத்துக்களைச் சொல்ல முயன்றார், "ஜிப்ரீல் இயேசுவை காப்பாற்றியிருந்தால், அது மக்களை நம்ப வைக்கும் அளவுக்கு இயேசுவின் அற்புதத்தை மிகப் பெரிதாக்கியிருக்கும், அது நியாயமானதல்ல" என்றார். இறுதியில், தனது அனைத்து கேள்விகளின் தர்க்கரீதியான முடிவைக் ஏற்றுக்கொள்ள மறுத்ததற்கான காரணத்தை ராஸி உண்மையில் ஒப்புக்கொண்டார்: குர்ஆன் வேறுவிதமாகக் கூறுகிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தது ஒரு வரலாற்று உண்மை, அதை நாத்திக அறிஞர்கள்கூட மறுப்பதில்லை. கிறிஸ்தவ மரபுகளை பின்பற்றுவதில்லை என அறியப்படும் பார்ட் எர்மன், பொந்தியோஸ் பிலாத்துவின் ஆணையால் இயேசுவின் சிலுவை மரணம் அவரைப் பற்றிய மிகவும் உறுதியான உண்மை என்று தனது நூலில் கூறுகிறார் (A Brief Introduction to the New Testament). அது மறுக்க முடியாத உண்மை. ஆறு நூறு ஆண்டுகள் கழித்து வந்த ஒருவர் அவரது சொந்த சீடர்களும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத தெளிவற்ற சொற்களை கூறினார் என்பதற்காக, ஏற்கனவே இருந்ததை நாம் மறுக்க வேண்டுமா அல்லது சந்தேகிக்க வேண்டுமா? ஆனால் இயேசு அல்ல சிலுவையில் அறையப்பட்டது, அவரைப் போன்ற தோற்றம் கொண்ட வேறு யாரோ இருந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள் என்பதால் நாம் மாற்றிக் கொள்ள வேண்டுமா? உண்மையில் இதே போன்ற முரண்பாடான கருத்தை முகமது நபியைப் பற்றிச் சொன்னால், முஸ்லீம்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா? குர்ஆனும் இஸ்லாமிய வரலாறும், முகமது நபி அபூ பக்கருடன் மக்காவிலிருந்து மதீனாவுக்கு தப்பிச் செல்லும்போது ஒரு குகையில் பதுங்கியிருந்ததாகக் கூறுகின்றன (குர்ஆன் 9:40). குகையிலிருந்து வெளியே வந்தவர் முகமது நபி இல்லை, அபூ பக்ருக்கு அப்படித் தோன்றிய வேறு யாரோ என்று சொன்னால் என்ன ஆகும்? எல்லாவற்றிற்கும் மேலாக, குகையிலிருந்து வெளியே வந்த அவர் எழுதிய குர்ஆன் வசனங்கள் மக்காவில் ஏற்கனவே எழுதப்பட்ட வசனங்களிலிருந்து மிகவும் வேறுபட்டவை. இந்த குகை சம்பவத்திற்குப் பிறகு முகமது மிகவும் வன்முறையில் ஈடுபட்டதால், குணத்தில் ஒரு வித்தியாசமான மாற்றத்தைக் காண்கிறோம். அவர் தனது இலக்குகளை மாற்றினார்; அவர் இப்போது ஒரு போர்வீரராக மாறினார், அந்த குகையிலிருந்து வெளியே வந்த ஒரு வருடத்திற்குள் அவர் மற்ற பழங்குடியினரை ஆக்கிரமிக்கத் தொடங்கினார், அதே நேரத்தில் அவர் அதற்கு முன்பு யாரையும் தாக்கியதில்லை. முஸ்லீம்கள் அத்தகைய கருத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்களா? நிச்சயமாக இல்லை! "அது அவர்களுக்குத் தோன்றியது" என்று கேட்கும்போது கிறிஸ்தவர்கள் சங்கடமாக உணர்கிறார்கள். அந்த வசனத்தின் எஞ்சிய பகுதி கூறுகிறது, "அவரிடம் இருந்து சந்தேகத்தில் அவர் மீது கருத்து வேறுபாடு கொண்டவர்கள், ஊகங்களைப் பின்பற்றுவதைத் தவிர, அவரிடம் அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை", ஆனால் நாம் பார்த்தபடி, முஸ்லீம்கள் தான் சந்தேகத்தில் உள்ளனர் மற்றும் ஊகங்களைப் பின்பற்றுகிறார்கள், மறுபுறம் கிறிஸ்தவர்கள் வரலாறு முழுவதும் இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர்:

“நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.” (1 கொரிந்தியர் 15:3-5)

இந்த விசுவாச பிரமாணம் கி.பி. 30களின் பிற்பகுதி / 40களின் தொடக்கம் வரை செல்கிறது, இது சிலுவையில் அறையப்பட்ட பின் 5-7 ஆண்டுகள் கழித்து எழுதியதாகும். பைபிளுக்கு வெளியே, "அப்போஸ்தலர்களின் விசுவாச பிரமாணம்" என்பதும் உள்ளது, இது இயேசுவைப் பற்றி இவ்வாறு கூறுகிறது:

“பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையப்பட்டார், மரித்து அடக்கம்பண்ணப்பட்டார்; மரித்தோரிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.”

www.Grace-and-Truth.net

Page last modified on April 24, 2026, at 02:17 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)