Home -- Tamil -- 17-Understanding Islam -- 030 (Christ’s Miraculous Birth)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba
Previous Chapter -- Next Chapter
17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி மூன்று: முஸ்லீம் கிறிஸ்துவைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 6: இஸ்லாத்தில் கிறிஸ்து
6.2. கிறிஸ்துவின் அற்புதப் பிறப்பு
குர்ஆன் மர்யத்திற்கும் தேவதூதன் ஜிப்ரீலுக்கும் இடையே நடந்த உரையாடலையும், மர்யத்திற்கும் குழந்தை ஈஸாவுக்கும் இடையே நடந்த உரையாடலையும், அவரது கருத்தரித்தல் மற்றும் பிறப்பு தொடர்பாக மற்றொரு உரையாடலையும் விவரிக்கிறது. இவை இரண்டும் குர்ஆனின் ஒரே அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளன:
(அப்படி அவரைக் கண்டதும்,) "நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)" என்றார். "நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார். அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என்று கூறினார். "அவ்வாறேயாகும்; 'இது எனக்கு மிகவும் சுலபமானதே மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்' என்று உம் இறைவன் கூறுகிறான்" எனக் கூறினார். அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார் பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார். பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீச்ச மரத்தின்பால் கொண்டு வந்தது "இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா" என்று கூறி(அரற்றி)னார். (அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து "(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்" என்று அழைத்து கூறினான். "இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும். "ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், 'மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்" என்று கூறும்." (அல்குர்ஆன் 19:18-26)
முகமது கூறுவது போல குர்ஆன் கிறிஸ்துவை "நீதியுள்ள மகன்" என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது:
"பிறக்கும்போது சாத்தான் தொடாமல் எந்தக் குழந்தையும் பிறப்பதில்லை, உடனே அது சாத்தானால் தீண்டப்படுவதால் சத்தமாக அழ ஆரம்பிக்கிறது, மரியாளும் அவளுடைய மகன் மாத்திரம் சாத்தானால் தொடப்படவில்லை." (ஸஹீஹ் புகாரி).
முகமதுவின் கூற்றுப்படி, ஒவ்வொரு மனிதனும் சாத்தானால் தொடப்படுகிறான் – அதில் நாம் முன்பு பார்த்தது போல சுத்திகரிக்கப்பட வேண்டியவர்களில் முகமதுவும் அடங்குவார் – கிறிஸ்துவைத் தவிர. இவ்வாறு, இஸ்லாமியத்தின் படி கிறிஸ்து பாவமற்றவர்.