Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 17-Understanding Islam -- 070 (Belief in the preservation of the Qur’an and the corruption of the original Bible)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu? -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பாகம் ஐந்து: கிறிஸ்தவத்துக்கான முஸ்லீம்களின் எதிர்ப்பைப் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 13: கிறிஸ்தவத்துக்கு இஸ்லாமின் எதிர்ப்பு

13.1. குர்ஆன் அப்படியே இருக்கிறது, ஆனால் பைபிள் திருத்தப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கை


இஸ்லாமிய கோரிக்கைகள் இந்த விஷயத்தில் பல்வேறு வடிவங்களில் வந்தாலும், அடிப்படையில் இது இப்படி இருக்கும்:

  • (குர்ஆன்) முகமது நபியால் மனனம் செய்யப்பட்டு, பின்னர் தோழர்களுக்குக் கற்பிக்கப்பட்டது, அவரது வாழ்நாளில் எழுத்தர்களால் எழுதப்பட்டது. அதன் 114 அத்தியாயங்களிலும் (சூராக்களிலும்) ஒரு வார்த்தைகூட நூற்றாண்டுகளாக மாற்றப்படவில்லை. (The Australian Federation of Islamic Councils Inc., Understanding Islam and the Muslims (pamphlet), November 1991)
  • உலகில் வேறு எந்த நூலையும் குர்ஆனுடன் ஒப்பிட முடியாது... இந்த அல்லாவின் அதிசயிக்கத்தக்க வேதம் கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக ஒரு புள்ளி கூட மாற்றமடையாமல் இருந்து வருவது தான் இந்த வேதத்தின் வியக்கத்தக்க உண்மை... அதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முஸ்லீம்களின் ஓதலைக் கேட்டு நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். (The Zayed Bin Sultan Al Nahayan Charitable Humanitarian Foundation, Basic Principles of Islam, Abu Dhabi, UAE: 1996, page 4)
  • முந்தைய வேதங்களிலிருந்து வேறுபட்டு, குர்ஆன் இறைவன் அதில் வாக்களித்தபடி, அது வெளிப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே அதன் அசல் அரபு மொழி வடிவில் மாற்றமடையாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வரலாறு அந்த வாக்குறுதியின் நிறைவேற்றத்தைக் கண்டது. ஏனென்றால், இறைவனின் திருமறையான குர்ஆன் இன்றுவரை நபி அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு, அவர்களால் ஓதப்பட்டது. உடனடியாக மனப்பாடம் செய்யப்பட்டு, ஏராளமான தோழர்களால் பதிவு செய்யப்பட்டது. இன்று வரை தலைமுறை தலைமுறையாக ஆயிரக்கணக்கான முஸ்லீம்களால் அதே வடிவத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குர்ஆனுக்கு ஒரே ஒரு பதிப்பு மட்டுமே உள்ளது. இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட அதே வார்த்தைகள் உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்களால் அவர்களின் அரபு மொழியில் தொடர்ந்து படிக்கப்படுகின்றன, ஓதப்படுகின்றன மற்றும் மனப்பாடம் செய்யப்படுகின்றன. (Saheeh International, Clear Your Doubts About Islam: 50 Answers to Common Questions, Saudi Arabia: Dar Abul-Qasim, 2008, pages 28-29)

இத்தகைய முஸ்லீம் கூற்றுகளை பின்வருமாறு சுருக்கலாம்:

i) நபிகள் நாயகம் குர்ஆன் இறை வெளிப்பாடு கிடைக்கும்போதே அதை மனப்பாடம் செய்துகொண்டார்.
ii) முகமது உடனே தனது தோழர்களிடம் சொல்லி கொடுத்து, அவர்கள் அதை எழுதிவைத்தார்கள். பின்னர், எந்த மாற்றமும் செய்யாமல் அது தொகுக்கப்பட்டது.
iii) குர்ஆனுக்கு ஒரே ஒரு பதிப்பு மட்டுமே உள்ளது.
iv) தற்போதைய குர்ஆன் பிரதிகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கின்றன, வேறுபாடுகள் இல்லை.
v) குர்ஆன் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
vi) குர்ஆன் மற்ற வேதங்களைக் காட்டிலும் மேலானது, ஏனென்றால் மற்றவை அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன, ஆனால் குர்ஆன் மட்டும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய விளம்பரக் கூற்றுக்கள் முஸ்லீம்களிடையே, அறிஞர்களாக இருந்தாலும் சரி, சாதாரண முஸ்லீம்களாக இருந்தாலும் சரி, மிகவும் பொதுவானவை; இவை அனைத்தும் அடிப்படையில் விற்பனை உத்திகளாகவே ஆகும், எந்தவிதமான ஆராய்ச்சிக்கும் தாக்குப்பிடிக்காது. குர்ஆனைப் பற்றிய இந்த அளவுகோல்களை முதலில் நாம் கையாள்வோம், பின்னர் இந்த அளவுகோல்களுக்கு எதிராக பைபிள் எங்கு உள்ளது என்பதைப் பார்ப்போம், இதில் இரட்டை தரம் இருக்கிறதா என்று பார்ப்போம்.

www.Grace-and-Truth.net

Page last modified on April 24, 2026, at 01:05 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)