முடிவுரை (இஸ்லாத்திலுள்ள உம்மத்தைப் புரிந்துகொள்ளுதல்)
தனிமனிதனை விட குழுவின் முக்கியத்துவத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது. குர்ஆன் முஸ்லீம்களிடம் கூறுகிறது:
குர்ஆனிலும், முகமது நபியின் அனைத்து போதனைகளிலும், குழுவின் முக்கியத்துவம் தனிநபரை விட மேலாக வலியுறுத்தப்படுகிறது. முஸ்லீம்கள் தங்களை ஒரே குழுவைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள், குர்ஆன் கூற்றுப்படி, இந்தக் குழு இஸ்லாமிய சமூகம் அல்லது உம்மா (Ummah) ஆகும்.
மேற்கத்திய நாட்டில் வசிக்கும் ஒரு முஸ்லீம், தனது நாட்டை விட்டு வெளியேறாதவராகவும், வேறு மொழி பேசாதவராகவும் இருந்தாலும், சீனா அல்லது நைஜீரியாவில் உள்ள முஸ்லீம்களை தனது மக்களாகக் குறிப்பிடுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.
இது ஒற்றுமை மற்றும் ஒற்றுமையின் மிகவும் பாராட்டத்தக்க தரமாக இருக்கலாம், ஆனால் இது அதன் எதிர்மறையான பக்கத்தைக் கொண்டுள்ளது. ஒரு முஸ்லீம் எவ்வளவு உறுதியுடன் இருந்தாலும், ஒவ்வொரு முஸ்லீம் மனதின் பின்னணியிலும் குர்ஆன் கூறுவது இருக்கிறது:
இந்த மக்கள் முதன்மையாக இஸ்லாமிய உம்மாவின் (முஸ்லீம் சமூகம்) ஒரு பகுதியாக தங்களை பார்க்கிறார்கள், தேசிய அடையாளம் இதற்கு அடுத்த நிலை சார்ந்தே இருக்கும். இந்த காரணத்தினால்தான், கடந்த ஆண்டுகளில், மேற்கத்திய நாடுகளில் பிறந்த நூற்றுக்கணக்கான முஸ்லீம்களும், சில சமயங்களில் இஸ்லாத்திற்கு மதம் மாறிய மேற்கத்திய மக்களும், உலகின் மற்றொரு பாதியைக் கடந்து, தங்கள் பிறந்த நாட்டிற்கு எதிராகப் போராடும் பிற முஸ்லீம்களுடன் இணையக் கண்டோம். எந்தவொரு முஸ்லீமுக்கும், அவருடைய விசுவாசம் முதலில் உம்மாவுக்கும், அவரது சொந்த நாட்டிற்கும் உம்மாவுக்கும் இடையே முரண்பாடு இருந்தால், அவருடைய விசுவாசம் உம்மத்திற்கு இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு குழு அடையாளத்தைப் போலவே தனிமனித சுதந்திரமும் இல்லாமல் போய்விட்டது. ஒருவர் எதனைச் செய்தாலும், அதை குழு எனும் பார்வையில் பார்க்க வேண்டும், குழு நலன்களே மிக முக்கியமானவை, குழுவின் செயல் திட்டத்தை முன்னேற்றுவதாக இருக்க வேண்டும். சில இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் சமூகம் மற்றும் சமூக ஒழுங்குமுறை மீது அதிக வலியுறுத்தல் இருக்கும். இது சில சமயங்களில் தனிப்பட்ட சுதந்திரங்களில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தலாம். முகமது நபிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் இருந்தபோதிலும், குர்ஆனில் ஒரு தோழரின் பெயர் மட்டுமே காணப்படுகிறது (குர்ஆன் 33:37). மீதமுள்ள அனைவரும் ஒரே தேசக் குழுவாகக் கருதப்படுகிறார்கள். எனவே, முஸ்லீம்களுடன் பழகும்போது, இஸ்லாத்தை கலாச்சாரம், மொழி, புவியியல் இருப்பிடம், தேசம் போன்றவற்றைக் கடந்த ஒரு விசயமாக முஸ்லீம்கள் பார்க்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். எகிப்து நாட்டு முஸ்லீம் ஒருவர், தான் வாழும் கண்டத்திலிருந்து வேறுபட்ட கண்டத்தில், தான் பேசாத மொழியைப் பேசும், தான் இதுவரை சந்தித்திராத இந்தோனேசிய முஸ்லீம் உடனான தனது உறவை, தனது அண்டை வீட்டாரான பிற மதத்தைச் சேர்ந்தவர் உடனான உறவை விட முக்கியமானதாகக் கருதுவார். இஸ்லாத்தில் இந்தக் கருத்து மிகவும் முக்கியமானது, இஸ்லாமியக் கல்வியில் அல்-வாலா’ வல்-பரா (இதன் பொருள் “விசுவாசமாய் நடந்துகொள்வதும் மற்றும் மறுப்பு”) என்ற ஒரு பிரிவு முழுவதும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இயேசுவைப் பின்பற்ற முஸ்லீம்களிடம் கேட்கும் தியாகத்தை நாம் உணர வேண்டும். வெளிப்புறத் துன்புறுத்தலுக்கு ஆளாகும் மிக அதிகமான சாத்தியத்தை மட்டுமல்லாமல், தங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு எதிராக குடும்பம், கலாச்சாரம் மற்றும் இனத் துரோகம் இழைப்பதாக உணர்தலையும், தங்கள் சுயம் மற்றும் அடையாளத்தைப் பற்றிய புரிதலில் முழுமையான மாற்றத்தையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்:
குர்ஆனின் பார்வையில் முழு உலகத்தையும் பார்த்து வருகின்றனர், மேலும் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நெருக்கமான உறவுகளை வளர்ப்பது பாவம் என்று கருதுகின்றனர். குர்ஆன் கூறுகிறது:
இஸ்லாமியர் ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பின்னர் இயேசுவைப் பின்பற்றுவது நாம் நினைப்பதை விட மிகவும் சிரமமானது. நிச்சயமாக, இயேசுவுடன் இந்த உலகத்திலும் மறுமையிலும் வாழ்வது எந்த தியாகத்தையும் விட மதிப்பு வாய்ந்தது என்பதே நற்செய்தி. அவரே இரட்சிப்பின் ஒரே வழி, நமக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆதாயம், நமக்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் சமாதானத்தைத் தருபவர், மனிதனின் பிரச்சினைகளை தீர்க்க வல்லவர், கடவுளுடன் ஒப்புரவாகச் செய்பவர். பிரச்சனை எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், அது இலகுவாகிவிடும், காரணம் பாடநுபவிப்பது என்பது கடவுளுடைய செயலாகும் (பிலி. 1:29). இவ்வாறு, இந்த புத்தகத்தின் தொடக்கத்தில் சுருக்கமாகக் கூறப்பட்டபடி, கர்த்தருக்கு மக்களைச் சேர்க்க அவர் நம்மைப் பயன்படுத்துவது என்பது நமது கடமை மட்டுமல்ல, அதுவே நமக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியமும் மகிழ்ச்சியும் ஆகும்.