Home
Links
Contact
About us
Impressum
Site Map?


Afrikaans
عربي
বাংলা
Dan (Mande)
Bahasa Indones.
Cebuano
Deutsch
English-1
English-2
Español
Français
Gjuha shqipe
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
മലയാളം
O‘zbek
Peul
Português
Русский
Soomaaliga
தமிழ்
తెలుగు
Türkçe
Twi
Українська
اردو
Yorùbá
中文



Home (Old)
Content (Old)


Indonesian (Old)
English (Old)
German (Old)
Russian (Old)\\

Home -- Tamil -- 17-Understanding Islam -- 022 (PILLAR 2: Salat (prayer))
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Telugu -- Ukrainian -- Uzbek -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி இரண்டு:இஸ்லாத்தின் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 4: இஸ்லாத்தின் தூண்கள்

4.2. தூண் 2: சாலத் - தொழுகை


கிறிஸ்துவ ஜெபங்களைப் போல இஸ்லாமிய ஜெபங்கள் அமைந்திருக்காது. இஸ்லாத்தில், ஜெபம் என்பது முன்னரே நிர்ணயிக்கப்பட்ட செயல்கள், உடல் அசைவுகள் மற்றும் வார்த்தைகளை உள்ளடக்கிய சடங்கு முறை ஆகும். இதனைச் செய்யும் விதத்தில் மிகக் குறைவான சுதந்திரமே வழங்கப்படுகிறது. தொழுகை செய்வதற்கு முன், தொழுகை நடத்தும்போது, தொழுகை முடிந்த பின் என பல்வேறு கட்டங்களில் கடைபிடிக்க வேண்டிய பல நெறிமுறைகள் உள்ளன. எந்த நேரத்தில் தொழ வேண்டும், எந்த நேரங்களில் தொழ கூடாது (உதாரணமாக, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகிய நேரங்களில் முஸ்லீம்கள் தொழுகை செய்ய அனுமதி இல்லை) என்பது போன்ற நேரக் கட்டுப்பாடுகளும் உள்ளன. தொழுகை செய்வதற்கான அடிப்படை விதிமுறைகள் குர்ஆன் அல்லது சுன்னாவில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், நடைமுறைப்படுத்துவதற்கு போதுமான விவரங்கள் இல்லாத இடங்களில், முகமது நபியின் மறைவுக்கு சுமார் 300 ஆண்டுகள் கழித்து உருவாக்கப்பட்ட இஸ்லாமிய சிந்தனைப் பிரிவுகளில் நான்கு முக்கிய பிரிவுகளில் ஒன்றின் குறிப்பிட்ட விளக்கத்தை முஸ்லீம்கள் பின்பற்றுகின்றனர்.

தொழுகைக்கு முன்பு, முஸ்லீம்கள் கைகளை, முகத்தை, தலையை மற்றும் கால்களை சுத்தப்படுத்தும் முறையான சடங்கைச் செய்ய வேண்டும். இது கழுவுதல் என்று அழைக்கப்படுகிறது. தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், சுத்தமான மண் அல்லது மணலைப் பயன்படுத்தி அதே சடங்கை செய்யலாம். குர்ஆனில் கழுவ வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருந்தாலும், எவ்வாறு செய்வது என்பது விவரிக்கப்படவில்லை. இதன் காரணமாக, எவ்வாறு கழுவ வேண்டும் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. உண்மையில், சுன்னி இஸ்லாத்தின் நான்கு முக்கிய மதப்பிரிவுகளில் ஒவ்வொன்றும் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதில் மட்டுமல்லாமல், அவற்றின் துணைப்பிரிவுகளும் அவற்றின் விளக்கங்களில் கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இதன் விளைவாக, பல்வேறு கழுவும் முறைகள் காணப்படுகின்றன. முகமது நபியின் செயல்களின் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு கழுவுதல் அடுத்த தொழுகை வரை அல்லது பல தொழுகைகளுக்காக கூட நீடிக்கும் என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் காற்று வெளியேறுதல், கழிப்பறைக்குச் செல்லல், காயத்திலிருந்து இரத்தம் வெளிப்படுதல் போன்றவை ஏற்படாத வரையே இது பொருந்தும். இது போன்றவை சம்பவிக்கும் சந்தர்ப்பங்களில் மீண்டும் கழுவ வேண்டும். சில இஸ்லாமிய கல்வி நிலையங்கள், தண்ணீர் அல்லாத வேறு எதையாவது சாப்பிடுவதோ அருந்துவதோ கழுவலை செல்லாதாக்கிவிடும் என்றும், தொழுகைகளுக்கு இடையில் சாப்பிட்டாலோ குடித்தாலோ ஒரு முஸ்லீம் மீண்டும் கழுவ வேண்டும் என்றும் கூறுகின்றன. உடலுறவுக்குப் பிறகு, தொழுவதற்கு முன்பு வெறுமே கழுதல் மட்டும் போதாது, ஆனால் முழுமையான சடங்கு குளியல் மூலம் தங்களை சுத்திகரித்துக் கொள்ள வேண்டும் என்று முஸ்லீம்கள் கருதுகிறார்கள். கழுவிய பின்னர் - அவர்கள் சேர்ந்த மதப்பிரிவைப் பொறுத்து - மெக்காவை நோக்கி தொழுகிறார்கள். தொழுகையை ஆரம்பித்த பிறகு, பேசவோ அல்லது சுற்றிப் பார்க்கவோ அனுமதி இல்லை; அப்படி செய்தால், தொழுகை செல்லாது, மேலும் அதை மீண்டும் தொடங்க வேண்டும். அவர்களின் கழுவுதல் செல்லாதது என்று ஆகிவிட்டதால், மீண்டும் தொழுகையைத் தொடங்குவதற்கு முன்பு மறுபடியும் கழுவ வேண்டும்.

இஸ்லாமியர்கள் தங்கள் நம்பிக்கையின் அடிப்படைக் கூறுகளாக வரையறுக்கப்பட்ட ஐந்து தினசரி தொழுகைகளை மேற்கொள்கின்றனர். இந்த தொழுகைகள் பகல் முழுவதும் குறிப்பிட்ட நேரங்களில் நடைபெறுகின்றன: விடியற்காலை, நண்பகல், பிற்பகல், மாலை, இரவு. தனித்தனியாக அல்லது கூட்டாகவும் தொழுகை செய்யலாம். தொழுகை செய்யும் இடம் பற்றிய பெரிய கட்டுப்பாடு இல்லை - மெக்காவை நோக்கி இருந்தால் போதும், எங்கிருந்தும் தொழலாம். தொழுகை என்பது மனப்பாடம் செய்யப்பட்ட சொற்றொடர்கள் மற்றும் உடல் அசைவுகளை உள்ளடக்கியது. விரும்பினால், குர்ஆனிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட (சிறிய அல்லது பெரிய பகுதியிலிருந்து) வசனங்களை ஓதலாம்.

இஸ்லாமிய மதத்தில், “கூடிவரும் நாள்” (வெள்ளிக்கிழமை), இஸ்லாமியத் திருவிழாக்கள் அல்லது ஈத்கள் (ஆண்டுக்கு இரண்டு), இறுதிச் சடங்குகள், வறட்சி (மழை வேண்டி), சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள், போர், பயம் போன்ற சந்தர்ப்பங்களுக்காகச் செய்யப்படும் தொழுகைகள் போன்ற பிற வகையான தொழுகைகளும் உள்ளன. இவற்றில் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட சொற்களும் செயல்களும் வரையறுக்கப்பட்டுள்ளன, ஆயினும் அவற்றுக்கிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக, இறுதி மரியாதைக்கான சடங்குத் தொழுகையில் சாஷ்டாங்கம் செய்யப்படுவதில்லை. வெள்ளிக்கிழமைத் தொழுகைக்கென கூடுதல் தேவைகள் உள்ளன; குறைந்தது 15 பேர் கொண்ட குழுவில் தொழ வேண்டும் - சில சட்டப் பிரிவுகளைப் பொறுத்தவரை 40 பேர் வரை இருக்கலாம் - மேலும் இது வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் தொழுகை நேரத்தில் நடைபெறுகிறது. மேலும், இதில் ஒரு பிரசங்கம் கட்டாயம் இடம்பெற வேண்டும். சில இஸ்லாமிய நாடுகளில், இந்த வெள்ளிக்கிழமை பிரசங்கங்கள் ஒரே மாதிரியாக இருக்கும்படி முன்கூட்டியே எழுதப்படுகின்றன, பொதுவாக மத விவகாரங்கள் துறை அல்லது நாட்டின் மத நிறுவனத்தால் இது செய்யப்படுகிறது. இது தீவிரவாதம் பரவுவதைத் தடுப்பதற்கான சமீபத்திய நடவடிக்கையாக காணப்படுகிறது.

பெண்கள் தொழும்போது, தலையும் முழுவதுமாக மறைக்கும் ஆடையை அணிந்திருக்க வேண்டும். என்றாலும், முகம் மற்றும் கைகளை மறைக்க வேண்டியதில்லை. சுதந்திரமான ஆண்களுக்கும் அடிமைகளுக்கும், அடிமை பெண்களுக்கும் தொப்புள் முதல் முழங்கால் வரை மறைக்கும் எந்த ஆடையையும் அணியலாம். உண்மையில், முஸ்லீம்கள் தங்கள் மத நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் விதத்தில், மதச்சடங்குகளில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகள், மத நூல்களில் கூறப்பட்டுள்ள விதிகளிலிருந்து குறிப்பிடும் அளவுக்கு வேறுபட்டு காணப்படுகின்றன. உதாரணமாக, இஸ்லாமிய நூல்களில், ஆண்கள் தொப்புளுக்கும் முழங்காலுக்கும் இடைப்பட்ட பகுதியை மட்டும் மறைத்துக் கொண்டால் போதுமானது, சட்டை தேவையில்லை என்று கூறப்பட்டிருந்தாலும், இன்றைய முஸ்லீம் சமூகங்களில், ஆண்கள் சட்டை அணியாமல் தொழுகை நடத்துவது அநாகரிகமான செயலாக கருதப்படுகிறது. பெரும்பாலான முஸ்லீம்களுக்கு, முஸ்லீம் பெண் அடிமைகள் மேல் உடம்பை மறைக்காமல் தொழலாம் என்ற உண்மை தெரியாது. அதிகம் கற்றுள்ள சில முஸ்லீம்களுக்கும் கூட இந்த விஷயம் தெரிந்திருக்காது. இஸ்லாமியத்தில், தொழுகைக்காக செருப்பு அணிந்து கொள்வது தவறல்ல, மாறாக அது ஒரு கட்டளை என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்:

"யூதர்களிடமிருந்து வேறுபட்டிருங்கள்; உங்கள் செருப்புகளை அணிந்தே தொழுங்கள்" என்று நபிகள் கூறினார். (Sunan Abi Dawud)

இருப்பினும், இன்றைய காலகட்டத்தில், முஸ்லீம்கள் தொழுகையின்போது செருப்பு அணிவது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. தொழுகைக்கு முன்பு எப்போதும் செருப்புகளை கழற்றிவிட்டுத்தான் தொழுகிறார்கள்.

இவை அனைத்தும், கிறிஸ்தவ ஜெபத்தை முஸ்லீம்களுக்கு கிட்டத்தட்ட புரிந்துகொள்ள முடியாததாக ஆக்குகிறது. தனிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது, எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் ஜெபம் செய்வது, ஆராதனைப் பாடல்களைப் பாடுவது - இவை அனைத்தும் முஸ்லீம்களுக்கு விசித்திரமாகத் தோன்றுகிறது. இதை நினைவில் கொள்வது நல்லது, ஏனென்றால் முஸ்லீம்கள் நாம் கடவுளிடம் ஜெபம் செய்கிறோம் என்று சொல்லும்போது நாம் என்ன அர்த்தத்தில் அதை சொல்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள முடியாது. நாம் ஒரே சொற்களைப் பயன்படுத்துகிறோம் என்பதால், ஒரே கருத்தைத் தெரிவிப்பதாகக் கருதிவிட முடியாது. உண்மையில், நாம் முற்றிலும் வேறுபட்ட விஷயத்தைப் பற்றிப் பேசுகிறோம், அது முஸ்லீம்களுக்கு மிகவும் புதியதாக இருக்கும். ஏனென்றால், நாம் ஜெபம் செய்யும் விதத்தைப் போன்று அவர்கள், அல்லாவுடன் தனிப்பட்ட உரையாடலில் ஈடுபடுவதில்லை.

துஆ (Duʽâ’) என்று அழைக்கப்படும் ஒரு வகையான பிரார்த்தனை உள்ளது. இது இஸ்லாத்தின் ஐந்தாம் கடமை அல்ல என்றாலும், இது வடிவமைப்பில் அதிக கட்டுப்பாடு இல்லாதது மற்றும் தனித்தனியாக மேற்கொள்ளப்படலாம். கிறிஸ்தவ ஜெபம் போன்றே இதுவும் இருக்கலாம், ஆனால் நாம் கடவுளுடன் இருப்பதாக நினைக்கும் நெருக்கமான உரையாடலுடன் ஒப்பிடும்போது, துஆ இன்னும் மறைமுகமானதாகவும், பொதுவான தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.

www.Grace-and-Truth.net

Page last modified on April 19, 2026, at 03:32 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)