Previous Chapter -- Next Chapter
1.4. ஹனீஃபாக்கள் (Hunafā')
இஸ்லாமுக்கு முந்தைய காலத்தில் வேறு சில ஒரே கடவுள் கொள்கை கொண்ட மதங்களுக்கான சான்றுகளும் உள்ளன, அவை அப்போதைய யூத மற்றும் கிறிஸ்தவ சமூகங்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம், இருப்பினும் நாம் அதைப் பற்றி உறுதியாகக் கூற முடியாது. இந்த ஒரே கடவுள் கொள்கை கொண்ட மரபுகளைப் பின்பற்றுபவர்கள் ஹனீஃபாக்கள் (அல்லது அரபு மொழியில் ஹனீஃபா) என்று அழைக்கப்பட்டனர். நிலைபெற்ற மதங்களைப் போல் அவர்கள் ஒரே ஒருங்கிணைந்த சமூகமோ, வரையறுக்கப்பட்ட கொள்கைகளோ கொண்டவர்களாக இல்லை. மாறாக, ஹனீஃபா என்பது தோராயமாக ஒரே கடவுள் நம்பிக்கையைக் கொண்டிருந்த தனிநபர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான சொல்லாகும்.
புகழ்பெற்ற ஹனீஃபாக்களில் ஒருவராக கவிஞர் உமய்யா இப்னு அபி-ஸால்ட் (Umaiya ibn Abī-Salt) இருந்தார். கடைசி நாளில் ஹனீஃபாக்களின் மதத்தைத் தவிர, அனைத்து மதங்களையும் அல்லாஹ் தள்ளுபடி செய்வார், என்று உமய்யா கூறியதாகக் கூறப்படுகிறது. இஸ்லாமிய ஆதாரங்கள், முகம்மது தன்னை இறைத்தூதர் என்று அறிவிப்பதற்கு சற்று முன்னர், உமய்யா இப்னு அபி-ஸால்ட் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று அறிவித்ததாகக் கூறுகின்றன. அவரைப் பற்றிய கதைகள் முகம்மதுவைப் பற்றிய கதைகளோடு ஒத்துபோகின்றன. எடுத்துக்காட்டாக, மலாய் (இறை தூதர்கள்) அவரது இருதயத்தைத் தூய்மைப்படுத்த வருதல், விலங்குகளிடம் பேசும் திறன் போன்றவை இதில் அடங்கும். முகம்மது, உமய்யா இப்னு அபி-ஸால்ட் மற்றும் அவரது கருத்துக்களைப் பற்றி அறிந்திருந்தார், அவரால் பாதிக்கப்பட்டிருக்கலாம். குர்ஆனின் வசனம் (3:85): "இஸ்லாத்தைத் தவிர வேறு மதத்தை விரும்புகிறவனிடமிருந்து அது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, அவன் மறுமை நாளில் நிராகரிக்கப்படுவான்" என்பது இந்த பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட உமய்யாவின் கூற்றை ஒத்திருக்கிறது. இஸ்லாமிய கதைகளின்படி, உமய்யா இப்னு அபி-ஸால்ட் முகம்மதை சந்தித்து அவரது செய்தியை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்த முகம்மது, "[அவரது] கவிதைகள் நம்பின, ஆனால் அவரது இதயம் நம்பவில்லை" என்று கூறியதாகக் கூறப்படுகிறது.
இன்னொரு குறிப்பிடத்தக்க நபர் குஸைன் இப்னு ஸாயிதா, இவர் ஒரு பிரசங்கி ஆவார். இவரது பேச்சாற்றல் இஸ்லாமுக்கு முந்தைய அரேபியர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. முகம்மது தன்னை இறைத்தூதர் என்று அறிவிப்பதற்கு முன்பே குஸைன் இப்னு ஸாயிதா இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சில இஸ்லாமிய பாரம்பரியங்கள் குஸைனின் போதனைகளை முகம்மது அறிந்திருந்தார் என்று கூறுகின்றன. குஸைன் இப்னு ஸாயிதா முகம்மது மீது ஏற்படுத்திய (சாத்தியமான) தாக்கத்தைப் பற்றி மேலும் அறிய, முஸ்லீம் வரலாற்று ஆசிரியர்களான இப்னு ஹிஷாம் மற்றும் இப்னு கதீர் ஆகியோர் எழுதியவைகளைப் பார்க்கலாம். இப்னு ஹிஷாம், முகம்மது (தன்னைத்தானே ஒரு தீர்க்கதரிசி என்று அறிவித்த பிறகு) மற்றும் அவரது தோழர்கள், ஜாருத் என்ற புலவர் உட்பட, அவர்களுக்கு இடையே நடந்த உரையாடலைக் குறிப்பிடுகிறார்.
இப்னு கதீர் (ரஹ்) இந்தக் கதையைத் தொடர்கிறார்.
குர்ஆனைப் பரிச்சயமுள்ளவர்களுக்கு, குஸின் (Quss) உரையுக்கும், குர்ஆனுக்கும் இடையே ஓசை நடை மற்றும் சொற்களின் அமைப்பு போன்றவற்றில் சில ஒற்றுமைகள் இருப்பதை உணர முடியும். முகம்மது நபியின் போதனைகளின் வளர்ச்சியில், குஸ் (Quss) நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று திட்டவட்டமாகக் கூற முடியும்.
இஸ்லாத்துடன் சில ஒத்துப்போகும் நம்பிக்கைகளை மற்ற ஹனீஃபாக்கள் கொண்டிருந்தனர். உதாரணமாக, ஜைத் இப்னு அம்ர் (Zayd ibn Amr) என்ற மனிதர், குறைஷி (Quraysh) (முகம்மது நபியின் சமூகம்) மக்களின் மதத்தை கண்டித்து வந்தார்: “ஓ குறைஷி மக்களே, நான் தவிர எவரும் ஆபிரகாமின் மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் இல்லை.” ஜைத் தனது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொண்டார்; கெட்டுப்போன இறைச்சி, இரத்தம், அல்லது சிலைக்காக பலியிடப்பட்ட எதையும் அவர் உண்ணவில்லை. அரேபியர்களிடையே பெரும்பாலும் பின்பற்றப்பட்ட பெண் குழந்தைகளைக் கொலை செய்வதை ஜைத் எதிர்த்தார். மேலும், சிலை வழிபாட்டைக் கண்டித்தும், தனது நம்பிக்கைகளைப் பற்றியும் பல பாடல்களை எழுதினார். எடுத்துக்காட்டாக:
நீங்கள் சொல்வது போல் பல கடவுள்கள் இருந்தால்,
இஸ்லாத்திற்கு முன்னர் அரேபியாவின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட அக்தம் பின் சைஃபி போன்ற பிற ஹனீஃபாக்கள் சட்ட அதிகாரத்தைப் பெற்றிருந்தனர். அக்தம் பின் சைஃபி வழங்கிய பல தீர்ப்புகள் முகம்மது நபியால் பின்பற்றப்பட்டன. அப்து அல்-முத்தாலிப்பின் (முகம்மது நபியின் பாட்டனார்) மகன்களை அக்தம் பார்த்தபோது, “அல்லாஹ் ஒரு பேரரசை நிறுவ விரும்பினால், அவர்களையே தேர்ந்தெடுப்பார், அவர்கள் மனிதர்களின் சந்ததி அல்ல, அல்லாஹ்வின் சந்ததி” என்று கூறியதாகக் கூறப்படுகிறது.
சிலை வழிபாட்டை வழக்கமாகக் கொண்டிருந்த அரேபியர்களிடையே, இந்த ஹனீஃபாக்கள் தனித்துத் திகழ்ந்தனர். அவர்கள் ஆபிரஹாம் (Abraham) நபியின் தூய ஒரே கடவுள் கொள்கையை பின்பற்றியவர்களாகவும், ஆபிரஹாம் நபியின் மதத்தின் சில அல்லது அனைத்து நம்பிக்கைகளையும் கொண்டிருந்தவர்களாகவும் இருந்தனர் என்று முஸ்லீம்கள் நம்புகின்றனர். இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவில், யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களைக் குறிக்க இந்தச் சொல் (Hanif) பயன்படுத்தப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டுள்ளோம்; இருப்பினும், குர்ஆன் இந்த ஒரே கடவுள் கொள்கையைக் கொண்ட மதங்களை ஒன்றிணைக்க முயற்சிக்கிறது, “ஹனீஃப்” (Hanif) என்ற சொல்லை ஒரு முறை கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களைக் குறிக்க (குர்ஆன் 98:5), ஒரு முறை முஸ்லீம்களைக் குறிக்க (குர்ஆன் 22:31), பத்து முறை ஆபிரஹாம் நபியைக் குறிக்க பயன்படுத்துகிறது. முகம்மது நபி தீர்க்கதரிசிகளின் நீண்ட வரிசையில் கடைசித் தீர்க்கதரிசி என்ற தனது கோரிக்கையை நியாயப்படுத்தி, தனது விருப்ப சிந்தனைக்கேற்ப குர்ஆன் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும், உண்மையில் ஒரே ஒரு நம்பிக்கை முறையைக் குறிக்கவில்லை (மேலே குறிப்பிட்டபடி, அது இல்லை) என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.