Previous Chapter -- Next Chapter
13.1.3. குர்ஆனின் ஒரேயொரு பதிப்பு மட்டும் தான் இருந்ததா?
குர்ஆனின் ஒரே பதிப்புதான் இருந்தது என்ற விளம்பரக் கூற்றுக்கும் வரலாற்றுச் சான்றுகள் இல்லை. மாறாக, இஸ்லாமிய ஆதாரங்களில் இருந்து நாம் உறுதியாக அறிவது என்னவென்றால், “ஒரே” பதிப்பு இல்லை, மாறாக ஏழு பதிப்புகள் இருந்தன என்பதே. இந்த பதிப்புகள் “அஹ்ருஃப்” என்று அழைக்கப்படுகின்றன - அல்லது மொழியின் எழுத்துக்கள். “அஹ்ருஃப்” என்ற சொல்லின் துல்லியமான அர்த்தம் இந்த சூழலில் தெளிவாக இல்லை, மேலும் அது பல்வேறு வழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஆனால் பொதுவாக அவை வெவ்வேறு உள்ளடக்கம் அல்லது குறைந்தபட்சம் வேறுபட்ட சொற்களை கொண்ட பதிப்புகளைக் குறிக்கின்றன என்பதில் பொதுவான உடன்பாடு உள்ளது. முகமது நபியின் தோழர்களில் சிலர் அவற்றை குர்ஆனிலிருந்து வந்தவை என்று கூட அடையாளம் காணமுடியாத அளவுக்கு அந்த ஏழு பதிப்புகள் அவ்வளவு வேறுபட்டிருந்தன. முகமதுவின் வாழ்நாளில் உமர் இபின் அல்-கத்தாப் மற்றும் ஹிஷாம் பின் ஹக்கீம் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைப் பற்றி புகாரி எழுதுகிறார். ஹிஷாம் குர்ஆனின் ஒரு அத்தியாயத்தைப் படித்துக்கொண்டிருந்தார்; அப்பொழுது உமர் கூறினார்:
உமர் கற்றுக்கொண்ட குர்ஆனை ஒப்பிடும்போது, ஹிஷாம் ஓதியது முற்றிலும் அடையாளம் காண முடியாத அளவிற்கு வேறுபட்டதாக இருந்ததால், உமர் ஹிஷாமைத் தாக்க முயன்றார்.
புகாரி அறிவிப்பதாவது, ஒவ்வொரு வகையாகவும் ஜிப்ரீல் (அலை) தமக்கு கற்றுக்கொடுத்த விதத்தை விவரித்ததன் மூலம் ஏழு பிரிவுகளையும் முகமது நபி மேலும் உறுதிப்படுத்தினார்.
ஒரு காலத்தில், முகமது நபி அவர்களால் ஒன்றுக்கு மேற்பட்ட குர்ஆன் பதிப்புகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், ஓதும் முறைகள் மக்களிடையே இத்தனை சிக்கல்களை ஏற்படுத்தியதால், குர்ஆன் அல்லது அதன் எந்த ஒரு பகுதியின் எழுதப்பட்ட பதிப்புகளையும் சேகரிக்க உத்தரவிட்டார்; அவர் முகமது நபியின் பரம்பரையினர், குரைஷ் மக்களின் பேச்சு வழக்கிற்கு மிக நெருக்கமான பதிப்பை அங்கீகரித்து, மற்ற அனைத்தையும் எரிக்கும்படி கட்டளையிட்டார். இந்த ஒரே பதிப்பின் பிரதிகள் எடுக்கப்பட்டு முஸ்லீம் சமூகங்கள் முழுவதும் விநியோகிக்கப்பட்டது. இதன் மூலம், அசல் ஏழு வகைகளில் சிறந்த ஒன்று மட்டுமே எஞ்சியிருந்தது.
ஆனால் இன்று - உத்மான் காலத்தில் ஒரு பதிப்பு மட்டுமே எஞ்சியிருந்த போதிலும் - மீண்டும் நம்மிடம் பல்வேறு பதிப்புகள் உள்ளன. முஸ்லீம்களிடம் இந்த வேறுபாடுகள் வாசிப்பதற்கான பாணி சார்ந்தவை மட்டுமே என்று கூறப்படுகிறது, ஆனால் பல சந்தர்ப்பங்களில் வேறுபாடு சொற்களைச் சேர்க்கிறது அல்லது விட்டுவிடுகிறது அல்லது சொற்களை முற்றிலும் எதிர் அர்த்தங்களைக் கொடுக்கும் வகையில் மாற்றுகிறது.
உதாரணமாக, குர்ஆன் 19:19ல் இரண்டு வெவ்வேறு வாசிப்புகள் உள்ளன. சில இடங்களில் இவ்வசனம் கூறுகிறது:
قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَب لَكِ غُلَامًا زَكِيًّا
மற்ற பதிப்புகள் ஒரு எழுத்தை மாற்றியுள்ளன மற்றும் அந்த வசனம் பின்வருமாறு:
قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِيَهَب لَكِ غُلَامًا زَكِيًّا
ஒரே ஒரு எழுத்தின் இந்த மாற்றம் கொடுப்பவர் தேவதூதன் என்பதிலிருந்து அல்லாவாக மாற்றுகிறது.
"குர்ஆன் 30:2 இல் 'குலிபதி' என்ற வார்த்தை காணப்படுகிறது, அதன் அர்த்தம் 'தோற்கடிக்கப்பட்டவர்கள்'; மற்ற வாசிப்புகளில் இது 'கலாபதி' என்று எழுதப்பட்டுள்ளது, அதன் அர்த்தம் 'வெற்றி பெற்றவர்கள்' என்பதாகும். ஒரு உயிரெழுத்தை மாற்றுவது அர்த்தத்தை முழுவதுமாக மாற்றிவிடும்."
குர்ஆன் 40:20 மற்றொரு எடுத்துக்காட்டு. சில இடங்களில் “AW An” (பொருள்: OR that அல்லது அது), ஆனால் பிற இடங்களில் “WA An” (பொருள்: AND that ..மேலும்).
இது போன்ற பல உதாரணங்கள் உள்ளன. விரிவான பரிசீலனைக்கு கீத் ஸ்மாலின் "குர்ஆன் கையெழுத்துப்பிரதிகளின் உரை விமர்சனம் (Textual Criticism and Qur’an Manuscripts) என்ற புத்தகத்தைப் பார்க்கவும்.